Tuesday, 11 December 2012

திரு.சொ.சொ.மீ. சுந்தரம்


திரு சொ  சொ  மீ சுந்தரம் அவர்கள் குறித்த ஒரு தொகுப்பு அவரிடம் இருந்து எனக்கு கிடைத்தது. அதனை இங்கே பதிவிட்டுள்ளேன்.


        திரு சொ சொ மீ அவர்கள் 7.8.1943 அன்று தெய்வத்திரு சொர்ணலிங்கம் செட்டியார், தெய்வத்திரு  மீனாட்சி ஆச்சி ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். அவர் தன் கல்லூரிப் படிப்பினை காரைக்குடி அழகப்பக் கல்லூரியில் இளம் வணிகவியலையும்   (B. Com ),  முது  வணிகவியலினை பச்சையப்பன் கல்லூரியிலும், M.Phil பட்டத்தை மதுரைக் காமராசர் பல்கலைகழகத்திலும் பெற்றார்.  வணிகவியலில் பட்டம் பெற்று பணி  செய்தாலும் முனைவர். வ.சுப. மாணிக்கனார்,  கம்பனடிப்பொடி என வழங்கப்படும் தெய்வத்திரு காரைக்குடி  சா. கணேசன் ஆகியோர் தூண்டுதலினால் தமிழ் பயின்று, படிக்கும் காலத்தில்  பலகலைக் கழக மரபுக் கவிதைப் போட்டி, சென்னை மாணவர் மன்ற கவிதைப் போட்டி ஆகியவற்றில்  மரபுக் கவிதை எழுதி முதல் பரிசு பெற்றுள்ளார்.

           1962 முதல் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும், சிங்கப்பூர்  மற்றும் இலங்கையிலும் நடைபெறும் கவியரங்குகளில் பங்கு பெற்று, பின்னர் தலைமையும் ஏற்றுள்ளார். `1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், கவியரசர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற "தலையாய தமிழுக்கு நிலையாய  மகுடங்கள்" என்றத் தலைப்பில் 400 வரி மரபு கவிதைக்கு பொற்கிழிப் பெற்று, "பொற்கிழிக் கவிஞர்" ஆனார். கவியரசால், சொல்லுக்கு சொல் மீறும்  சுந்தரம் என்றப்  பாராட்டைப் பெற்றார்.

        1999 ல் மதுரை ராஜா மன்றத்தில் தமிழிசை சங்கத்தினரால் தமிழ் பணிக்காக மீண்டும் ஒரு பொற்கிழிப் பெற்றார். 2002 ல் சென்னை கம்பன் கழகம், 2005 ல் முன்னாள் அமைச்சர் இராம. வீரப்பன் அவர்களின் 80 வது அகவை கொண்டாட்டம், இவற்றில் பாராட்டு பெற்றார்.  2009 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தால் "தமிழாகமச் சிந்தனைச்  செல்வர்" என்றப்  பட்டம் சூட்டப் பெற்றார்.

        மதுரைத் திருப்புகழ் சபையினில் மாதந்தோறும் திருப்புகழ் விரிவுரை நிகழ்த்தி வரும் இவர், மதுரை கம்பன் கழகப் பொருளாளராக பணியாற்றுவதோடு, 2003 ஆம் ஆண்டு முதல் மதுரையில் திருவாசக விழா  நடத்தி வருகிறார்.  இவர் திருப்புகழையும், திருவாசகமும் முற்றும் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இது மட்டுமல்லாது திருமந்திரம், பெரிய புராணம், கந்தபுராணம், கம்ப ராமாயணம், அபிராமி அந்தாதி, வில்லி பாரதம், திருவருட்பா, திருப்புகழ் ஆகியவற்றில் 15 நாட்கள் தொடர் சொற்பொழிவு செய்திருக்கிறார்.  தன்  15ஆவது  வயதில்  சிவ  தீக்ஷை  பெற்ற இவர், 1969 முதல் சபரி மலை யாத்திரையும், பழனிக்கு  காரைக்குடியில் இருந்து தைப் பூசத்திற்கு பாத யாத்திரையும் சென்று வருகிறார்.

இவர் பெற்ற பட்டங்களும் ஆண்டும், வழங்கியோரும்:
 1) 1972 - சொல்லோவியர் - பாவலர் மன்றம், திருப்பனந்தாள்.
 2) 1978 - திருமந்திரச் சொல்மணி - பன்னிரு திருமுறை மன்றம், மதுரை
 3) 1981 - விரிவுரை வித்தகர் - விட்டவாசல் முனீஸ்வரர் கோவில், மதுரை.
 4) 1999 - திருப்புகழ் உரைமணி - மதுரைத் திருப்புகழ் சபை 
 5)2001 - செந்தமிழ்ப் பேரொளி - கஞ்சி மகாஸ்வாமி ட்ரஸ்ட், திருப்பரங்குன்றம்
6) 2005 - நற்றமிழ் நாவலர் - திருவள்ளுவர் கழகம், மதுரை.

           இவர் தமிழில், காஞ்சிப்  பெரியவர் திருநீறு விடு தூது,  பண்டிதமணி பிள்ளைத் தமிழ், ஆண்டவனும் ஆண்டவரும், உலகப் புகழ் பெரும் கோவிலூர்த் திருமடம், காசிப்பதியும் கங்கை நதியும், கட்டிகுளம்   மாயாண்டி சுவாமிகள் வரலாறு, திருவாசகம் மூலமும் உரையும்  எந்தையும் தாயும் என்ற நூல்களும், ஆங்கிலத்தில், Secretarial Practice, Business Organisation, Insurnce, Entrepreneurship Development & Business Environment ஆகிய நூல்களை எழுதி உள்ளார். திருவாசக மூலம் மற்றும் உரையை குறுந்தகட்டிலும் வெளியிட்டுள்ளார்.

           சிங்கப்பூர், இலங்கை, மலேசியா , நேபாளம், திபெத், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் வியட்நாம் போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இவர்  திருக்  கயிலாய  யாத்திரையும்  மேற்கொண்டுள்ளார்.  தமிழுக்காக பணி  புரிந்த இவர், வணிகவியல்  பேராசிரியராக  சென்னை  லயோலாக் கல்லூரியில் 1964 முதல்  1965 வரையிலும், பழனி -  பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 1966-67 ஆம் ஆண்டுகளிலும், 1967 முதல் 2008 வரையில்  நாம்  பயின்ற  சௌரஷ்ட்ராக்  கல்லூரியிலும்  பணியாற்றி  உள்ளார். 
  
கம்பன் அடிப்பொடி சா கணேசன் 10.4.1968 அன்று இவரை வாழ்த்தி  எழுதிய மரபுக் கவிதை இதோ உங்கள்  பார்வைக்கு:

நல்ல கவிவலவன்; நம்பனுறை செம் மனத்தனன்;
வெல்லத்  தமிழ்சுவைநா வீறாளன் - சொல்லரிய
மெய்யுணர்வு நன்குடைய மீனாட்சி சுந்தரன்
தெய்வ அருள் பெற்றுயர்க தேர்ந்து.

Monday, 12 November 2012

LET OUR SORROWS BURST LIKE CRACKERS..
OUR HAPPINESS BE LIKE SPARKLERS..
OUR DREAMS SOAR LIKE ROCKETS..
AND LET OUR LIFE BE ENLIGHTENED BY THE LIGHTS OF DIWALI...!!!


WISHING THE ALUMNAE A VERY HAPPY & 
PROSPEROUS DIWALI!!

Tuesday, 6 November 2012

9. NCC - சைக்கிள் சவாரி


பள்ளிப்பருவத்தில் NCC மாணவர்களின் உடை மற்றும் அவர்களின் மிடுக்கான தோற்றத்தில் ரொம்பவும் கவரப்பட்டிருக்கிறேன். அவர்களின் சுறுசுறுப்பான செயல்முறைகள் கட்டுக்கோப்பான பயிற்சிகளை பார்க்க வசீகரமாகயிருக்கும். காக்கி உடுப்பில் விரைப்பாக அவர்கள் நடந்து செல்வதைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. NCC யில் சேரனுமென்ற ஆசை அளவுகடந்திருந்தும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காததால் அது கைவரப்பெறாத கனவாகவாகவேயிருந்தது.

Wednesday, 31 October 2012

பேராசிரியர்களும் நானும் - 7

எல்லோருக்கும் ஒரு பதிவு என்றால் இவருக்கு மட்டும் இரண்டாவதும் பதிவிடும்  அளவிற்கு எத்தனையோ சம்பவங்கள். நாளும் ஒரு சம்பவம் நிகழும் என்றாலும் குறிப்பாய் சில சம்பவங்கள், என்னை முன்னிறுத்துவதையே  இங்கு குறிப்பிடுகின்றேன்.

Friday, 26 October 2012

பேராசிரியர்களும் நானும் - 6

  நாம் ஒருவரை சந்திக்கையில் சிலரை உடனேப் பிடித்து விடும், சிலரைக் கண்டால் வெறுப்பாய் இருக்கும். காரணம் தெரியாது.  அது முன்ஜென்மத் தொடர்பு காரணம் என்பார்கள் சிலர்.  அதுபோல், திரு சொ சொ மீ அவர்களுடனான தொடர்பு முன் ஜென்மத் தொடர்பு என்றும்  சொல்லலாம்.

Thursday, 18 October 2012

திரு சொ.சொ.மீ. உரை - “பக்தி இலக்கியம்”


திரு சொ.சொ.மீ. அவர்கள் தில்லியில் 15.09.2012 அன்று நடந்த அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் “பக்தி இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றிய போது பதிவு செய்யப்பட்டது.

பின்வரும் பாடல்களைத் தன் உரையில் குறிப்பிடுகிறார் :


பரிபாடல்

யா ஆம் இரப்பதை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்அருளும் அன்பும் அறனும் மூன்றும்

திருமந்திரம்

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே


திருஞான சம்பந்தர்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாம்மே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே

திருவாசகம்

ஏசினும், யான் உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைத்து வேசறு விடுதி கண்டாய்

அடைக்கலப்பத்து
மாவடு வகிர் அன்ன கண்ணி பங்கா!நின் மலர் அடிக்கே
கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்;
பா இடை ஆடு குழல் போல், கரந்து பரந்தது, உள்ளம்,
, கெடுவேன்;உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.

(திரு சொ  சொ  மீ சுந்தரம் அவர்களின் உரைக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்)

Sunday, 7 October 2012


வார்த்தைளே விமாய்......

        உலக மதங்களின் பாராளுமன்றம் நடைபெற்ற சிக்காகோவில் 1893இல் சுவாமி விவேகானந்தர் ‘அமெரிக்க நாட்டு  சகோதரிகளே, சகோதரர்களே’ என்று துவங்கிய,  வரலாற்றுச்சிறப்பு மிக்க சொற்பொழிவை நிகழ்த்தியது எல்லோரும் அறிந்த ஒன்று. இங்குள்ள ஆர்ட் இன்ஸ்டிடியூட் இருநூற்றைம்பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இதில் பல அரிய ஓவியங்களும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கலைப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படிருக்கின்றன. இந்த ஆர்ட் காலரியில் கண்காட்சி நடத்துவது பல ஓவியர்களுக்கு வண்ணக்கனவு.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் சுவாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை மையமாக இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது. இந்தப் பெருமையைச் சேர்த்தவர், ஜித்திஷ் கல்லட் (Jitish Kallat) என்ற பாரம்பரிய இந்திய ஓவியர். இவர் இந்த இடத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரையை இன்ஸ்டிடியூட்டின் Grand Stairs எனப்படும் மாடிப்படிகளில் வானவில் வண்ணங்களில் வரிசையாகப் பதித்து “Public Notice 3 என்ற பெயரில் ஓவியமாக்கி இருக்கிறார். முதல் படியிலிருந்து படித்துக்கொண்டே ஏறினால் இரண்டாம் தளத்தை அடையும்போது முழு உரையையும் படிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனித்தன்மை.
இவரின் கைவண்ணம் செப்டம்பர் 11, 2010 அன்று, சுவாமியின் சொற்பொழிவிற்கு சரியாக 108 வருடங்களுக்குப்பிறகு காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதன் எழுத்துக்கள் ஒளியால் விளங்குகின்ற சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் அச்சுறுத்தும் நிலைகளைக்குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன

.
விவேகானந்தரின் உரையை நினைவுப்பட்டயம் இட்டு புதுமையான கண்காட்சியாக்கி கௌரவித்திருப்பது பாராட்டத்தக்கது.

Tuesday, 2 October 2012

8. ரத்த தானம்!!


கல்லூரியில் படிக்கும் காலங்களில் பணம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.  அவற்றின் முக்கியத்துவமும் அவ்வளவாக தெரியவில்லை.  காலை எழுந்தவுடன் துடிப்பு...! பின்பு கலகலப்பாயிருக்கும் எங்கள் கல்லூரி.... மாலை முழுவதும் அதன் நினைப்பு...! என்று வழக்கப்படுத்திக்கொண்டதால் எதிர்காலம் கடந்தகாலம் என்பதெல்லாம் தேவையற்ற சமாச்சாரங்களாக அப்போது தோன்றியது. காலையுணவு வீட்டில் முடிந்துவிடும்.  பஸ் பாஸ் இருப்பதால் போய் வருவதற்கான பயண செலவு கிடையாது.  மத்தியானத்திற்கான சாப்பாட்டை டிபன் பாக்ஸில் கொண்டுவந்துவிடுவதால் கேண்டின் செலவு கிடையாது.  ஆகவே மொத்தத்தில் பாக்கெட் மணி அப்படிங்கிற விஷயமே இல்லாத ஒன்றாக இருந்தது.

Wednesday, 19 September 2012

7. நட்பின் விதை!!


              நிலவில் முதன்முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களை அமெரிக்கா மக்கள் எப்படி பேட்டி மேல் பேட்டி எடுத்திருப்பார்களோ ..? அந்தளவிற்கு முதன்முதல் மாணவிகள் இல்லத்திற்கு விஜயம் செய்த குழந்தைவேலுவிடம் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு விபரங்களைக் குடைந்தெடுத்தோம். அந்தசமயத்தில் அவன் எங்களுக்கு ஒரு கொலம்பஸாகவே.... தெரிந்தான்..!

விநாயகர் பெருமை


கணபதி, கஜானன், ஆனைமுகத்தான் என்றெல்லாம் நம்மால் துதிக்கப்படும் பிள்ளையார் இன்று விநாயக சதுர்த்தி நன்னாளில் நாடெங்கிலும் வணங்கப்படுகிறார்.  குறிப்பாக மகாராஷ்ட்ரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  அவரவர்  வீட்டில் நன்றாகக்   கொண்டாடப்பட்டு வந்த விநாயக சதுர்த்தி  விழாவினை மரியாதைக்குரிய திலகர் பெருமான் ஆங்கிலேயருக்கு  எதிராக பாரத மக்களை, குறிப்பாக ஹிந்துக்களை திரட்டுவதற்காக இத் திருவிழாவினை  சமூகத் திருவிழாவாக 1900 களில் நடைமுறைப்படுத்தினார்.   

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பதாக மிகவும் எளிமையான இறை. வயல்காடுகளில் பணி துவங்குகையில், அங்கே இருக்கும் சாணத்தைக் கொண்டு கூட பிள்ளையார் என பிடித்து வைத்து பூசிப்பதுண்டு. அதனில் சொருகப்படும் அருகம்புல்லினால், அச் சாணி கெடாது இருக்கும். அனைவர் வீட்டிலும் பிற தெய்வங்களுக்கு பூஜை செய்யும் சமயத்தில் மஞ்சளில் பிள்ளையார் செய்து அவர் அனுமதி பெற்றே முக்கிய பூஜை  துவங்கும்.  எத்தகைய எளிய ஓவியத்திலும் சிறப்பாய் விளங்கிடும் தெய்வம், கம்ப்யூட்டர் யுகத்தில் வித விதமாய் ஓவியங்கள் வருகின்றன. விநாயகர் கம்ப்யூட்டர் இயக்குவது போன்றெல்லாம், அதே போல் வித விதமாய் சிலைகளும்.


தமிழகத்தில், வாதாபி மீது படை எடுத்து வந்த பரஞ்சோதி என்பார் தமிழகத்தில் விநாயக வழிபாடு கொணர்ந்தார் எனவும்,  அதன் காரனமைத்தன் வாதாபி கணபதிம் பஜேஹம் என்ற பாடல் உள்ளதாக ஒரு வாதம் உண்டு. ஆனால் அதற்கும்  முன்னதாகவே தமிழகத்தில் வழிபாடு   நடந்துள்ளது என்பதற்கு பிள்ளையார்பட்டி விநாயகர் சாக்ஷி, சுமார் 2  அல்லது 3   ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட சிலை என்பது,  (அதன் கீழ் சிற்பியின் கையெழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது  என்பதும்  அங்கே இரு கையுடன், ஜடாமுடியுடனும் சிவ லிங்கத்தை வழிபடுகிறார்  என்பதும்  சுவாரசியமான தகவல்கள்) .  ஆனால் வேத காலத்தில் விநாயக வழிபாடு இல்லை, என்பது வியக்க வைக்கும் தகவல். ஆதி சங்கரரின் பஞ்சாயதன வழிபாட்டில், இடம் பெறும் சோனபத்ரம்    அவருக்குரியது. 
                                                       
விநாயகரின் தலை யானை, உடல் மனிதன் (உடல் பூத வகை  என்று சொன்னால்  பஞ்ச பூதங்களால் ஆன எனப் பொருள் கொள்ள வேண்டும்)
அவர் வாஹனம் மூஞ்சூறு எனப்படும் எலி வகை. பாலூட்டி வகையில் நிலத்தில் வாசிப்பதில் பெரியது யானை, சற்று நடுத்தரமான உருவம் மனிதன் மற்றும் சிறிய உருவம் எலி. எனவே  விநாயகரின் வடிவு தாய்மையின் வடிவம் என்பதாலே, தாய்க்கு முதலிடம் கொடுக்கும் ஹிந்துக்கள், கணேசருக்கும் முதலிடம் கொடுத்துள்ளார்கள்.

       பெரும்பாலான நூல்களில் அவர் வழிபாட்டு செய்யுள் இடம் பெறும். அவருக்கென விநாயகர் அகவல் ஒளவையாரால் தனியாகப் பாடப்பட்டுள்ளது. அது  முழுவதும் யோக சாஸ்திரத்தை குறிப்பதாக உள்ளது. அவருக்கு தமிழகத்தில் சிறப்பாக பிள்ளையார்பட்டி, திருச்சி, கோவை, புதுவை ஆகிய ஊர்களில் தனிக் கோயில்கள் உள்ளன. மதுரையில் இருக்கும் முக்குறுணி (1  குறுணி என்பது 6 படி) விநாயகருக்கு 18  படி அரிசி கொண்டு கொழுக்கட்டை படைப்பர், அது ஒரு வாரம் முன்னரே அடுப்பில் ஏற்றப்படும். நம்மில் நிறைந்திருக்கும் ஞானத்தை, மாயை மறைத்து இருக்கிறது என்பதன் குறியீடே கொழுக்கட்டை. (பூரணம் ஞானம், மாவு மாயை.)  18  என்ற எண்ணின் சிறப்பிற்கு கீதையின் அத்தியாயம் ஒன்றே தற்பொழுது போதுமானது. 


 

Tuesday, 18 September 2012

பேராசிரியர்களும் நானும் - 5

          நாங்கள் கல்லூரியில் படிக்க சேர்ந்த பொழுது எங்களுடன் கல்லூரியில் படிப்பிக்க சேர்ந்தவர்கள், திருவாளர்கள் மோகன் சாரும், பாலகிருஷ்ணன் சாரும்.  இருபாலர் வகுப்பை அமைந்ததைப் போலவே பணியிலும் இருபாலர் வேண்டும் என நிர்வாகம் நினைத்ததோ என்னவோ, சாந்தா மேடம் அவர்களை பணி  நியமனம் செய்தது.

Tuesday, 11 September 2012

இன்று.....11/9


இன்று அதாவது September 11 ல் மூன்று முக்கிய நிகழ்வுகள் உண்டு. அவற்றில் காலவரிசைப்படி முதலில் நம் நாட்டின் பெருமையை உலகறிய செய்தார் ஒரு ஞானி, ஒரு மாமனிதரை தமிழுலகும், பாரதமும் இழந்தது, தன் அழிவினை நோக்கி சென்று கொண்டு இருக்கும் தீவிரவாதத்தின் மிகப் பெரிய தாக்குதல்.

Monday, 10 September 2012

NOSTALGIA RECALLED

GREAT!! OUR BLOG WILL NOW BE NOSTALGIA RECALLED.

CONGRATULATIONS TO ONE & ALL!!!







அன்று அறியாதவன் - இன்று.....


எழுதத் துவங்கிய புதிதில் ஏதாவது புனைப்பெயரில் எழுதலாம் என்று நினைத்து அறியாதவன் என்ற பெயரில் எழுதத் துவங்கினேன். பிறகு ஏன் சொந்தப் பெயரிலேயே எழுதக்கூடாது எனத் தோன்றவே, இந்த பெயர் மாற்றம்.

தொடர்ந்து ஆதரவை விரும்பும்....

அன்வர் உசேன்.

பெயர் மாற்றம்

            "அறியாதவன்" என்ற புனைப் பெயரில் இதுவரை எழுதி வந்த அன்வர், அதிகம் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதன் பாதிப்பில் இவருக்கு பதிலாக இவர் பாணியில், "அறியாதவன்" என்ற பெயருக்கு பதிலாக சொந்தப் பெயரிலேயே இனி எழுதுவார்,  எழுதுவான்.

பெயர் மாற்றம் செய்ய 9 ஓட்டுக்கள் வந்துள்ளன. செய்ய வேண்டாம் என ஒரு ஓட்டும் விழவில்லை. இன்றுடன் வாக்குப் பதிவு முடிந்தது.  எனவே  "NOSTALGIA RECALLED" என்றப் பெயரை இந்த வலைப்பூவிற்கு சூட்டலாம் என இருக்கிறோம். அவரவர் வீட்டில் இந்நிகழ்வை சிறப்பாக கொண்டாடவும்.

6. நட்பின் அறிமுகம்!!



கல்லூரி காலங்களில் மட்டுமல்லாமல் எப்பொழுதும் என் நண்பர்களை டேய்....., போடா......, வாடா.......... என்று ஒருமையில் அழைப்பதுதான் ரொம்பப்பிடிக்கும். அப்படி அழைக்கும்போது அந்நியோன்னியமாக நெருக்கமாக உரிமையாக உணர முடிகிறது. ஆகவே அப்பவும் சரி, இப்பவும் சரி, நட்பின் விளிப்பை ஒருமையில் அழைத்தே........... களித்திருக்கிறேன். தோழிகளை வா... போ... என்ற ரீதியில் அழைத்து பழகியிருக்கிறேன். இப்போது சில நண்பர்கள் அவர்... இவர்..... என்று மரியாதையாக என்னை குறிப்பிடும் போதும் விளிக்கும் போதும் ஒவ்வாமையாக உணர்ந்திருக்கிறேன். பிரியபூமியில் மரியாதை தோலி உரிக்கப்பட்ட நட்பின் விதைகள் தான் வேரூன்றி தோழமை விருட்சமாக வளரும்.

Wednesday, 5 September 2012

பேராசிரியர்களும் நானும் - 4

       இன்று ஆசிரியர் தினம், இந்நாளில் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.  நம் அனைவருக்கும் அன்னையே முதல் ஆசிரியர், அவருக்கும், தந்தைக்கும், கல்விச்சாலைகளில் பாடம் கற்றுத்தந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், வாழ்வில் நமக்குப் பல உண்மைகளை கற்றுக் கொடுக்கும் உடன் வாழும் மக்களும் ஆசிரிய பெருமக்களே ஒருவகையில். அவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

Happy Teacher's Day!


ஆசிரியர் தின வாழ்த்து,

அவசியம் சொல்ல வேண்டிய ஒன்று,

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்,

கல்லாமை என்ற,அறியாமை இருளை நீக்கி,

கல்வி கண் தரும் இறைவன் நம் ஆசிரிய பெருமக்கள்.

அவர்களின் அரிய பணிக்கு தலை வணங்குவோம்!

Remembering with respect & affection!!

HAPPY TEACHER’S DAY!!!

Monday, 3 September 2012

அறிவிப்பு - 2

              There are so many response to change the name of the blog. Smt Viji has proposed a name of  Yesteryears@BCS - Nostalgia Recalled.  If you have any new name in the mind please share.  The best name will be selected and renaming this blog will held.
                 இவ்வலைப்பூவின் பெயரை மாற்ற வேண்டும் என அதிகம் பேர் விரும்புகின்றனர். இதற்கு   விஜி அவர்கள்  Yesteryears@BCS - Nostallgia Recalled என்றப்  பெயரை  முன் மொழிந்துள்ளார்.  உங்கள் மனத்திலும் ஏதேனும் புதுப் பெயர் தோன்றினால்  அவசியம் அனுப்பவும்.  நல்லப் பெயரை பரிசீலித்து, புது  பெயரை  விரைவில்  சூட்டுவோம். 



Sunday, 2 September 2012

5. முடிசூடா மன்னன் நாகு!!

எங்கள் கல்லூரிக்காலங்களில் பெரும்பாலும் நாங்கள் ஆசிரிய பெருந்தகைகளை அவ்வளவாக பகைத்துக்கொள்ளவில்லை. அதிகமாக கலாட்டா, கலவரம் இல்லாமல் அமைதி பூங்காவாகவே கடைசி வரையிருந்தது. எங்கள் வகுப்பில் மாணவிகள் மெஜாரிட்டியாகயிருந்த காரணத்தால் பேராசிரியர்களெல்லாம் நிம்மதியாகவே வகுப்பெடுத்து சென்றனர். என்னதான் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தாலும் வகுப்பு முடிந்து ஆசிரியர் சென்றபின்னர் தான் விழுந்து விழுந்து சிரிப்போம். ஆகவே பெரும்பாலான பேராசிரியர்களின் வகுப்பு நேரங்களெல்லாம் சர்வ நிசப்தமாகவேயிருக்கும்.

Friday, 31 August 2012

பேராசிரியர்களும் நானும் - 3


          ஆங்கிலப் பேராசிரியர்களைத்  தொடர்ந்து வருகிறார் நமது அன்புச் சகோதரராய் நடந்து கொண்ட திரு T.S. பாலகிருஷ்ணன் அவர்கள்.  அவர் கோபப் பட்டு ஒருநாளும் கண்டதில்லை. 

Wednesday, 29 August 2012

பேராசிரியர்களும் நானும் - 2

       திரு சேதுராம் அவர்களைப் பற்றிய முந்தைய  பதிவிற்குப் பின் தற்பொழுது ஆங்கிலத்துறை சார்ந்த பேராசிரியர்கள்  குறித்து.  நமக்கு, திருவாளர்கள் பிரேம்பாபு,  மோகன்ராம், ராமானுஜம், ராஜசேகரன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர்.

Tuesday, 28 August 2012

பேராசிரியர்களும் நானும்


              கல்லூரிக்காலங்களில் சற்று துறவு மனப்பான்மை, தாழ்வு மனப்பாமை வாழ்வே நடத்தி வந்தேன். யாரோடும் அதிகம் பழகமாட்டேன். எதையும் serious ஆகவே பார்ப்பேன். இதில் சில விஷயங்கள் இப்பொழுதும் தொடர்ந்தாலும் என்னுள் இயல்பாக இருந்த நகைச்சுவை உணர்வை வெளியில் காட்ட ஆரம்பித்த பின்பே என் வாழ்வில் பல மாற்றங்கள் வந்தன.

அறிவிப்பு-1

             Alumni - 2012 is named for this blog for the event of our Alumni meet.  This blog will continue as our link and magazine.  I think that

Monday, 27 August 2012

4. பேராசிரியர்களுடன் நாங்கள்!!

பேராசிரியை சாந்தா மேடம் எப்படி எங்களுக்கு ஆரம்பகாலங்களில் பீதியைக் கொடுத்தார்களோ? அதற்கு மாற்றமாக பேராசிரியர்களான பாலகிருஷ்ணன் சார் மற்றும் மோகன் சார் அவர்கள் மிகவும் நட்புடன் பழகியிருந்தார்கள். பாலகிருஷ்ணன் சார் மிக மிக அதிர்ஷ்டசாலி...! அவர் நடத்திய பாடங்களெல்லாமே easy ஆகவும்interesting ஆகவும் இருந்ததால் அவர் எடுக்கும் வகுப்புகளெல்லாம் ரொம்ப ஜாலியாய் கலகலப்பாயிருக்கும். நாங்கள் எப்பவும் கலகலப்பாயும் இலேசான மனதுடன் இருக்கவேண்டுமென்று அடிக்கடி சொல்வார்.

பயங்கர அறிவிப்பு

         அன்வர் நிகழ்வுகளின்  தொகுப்பை எழுதினால், நான் ஏன் பேராசிரியர்கள் உடன் ஏற்பட்ட என் அனுபவங்களை,

Monday, 20 August 2012

EID MUBARAK



உலகெங்கிலும் வன்முறைகள் ஓய்ந்து அன்பும், மகிழ்ச்சியும், சமாதானமும் ழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். 

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்.

Thursday, 16 August 2012

3. கல்லூரி களை கட்டுதல்

கல்லூரி வாழ்க்கையின் இனிமைகளை பலமுறை நண்பர்களுடன் பேசியிருக்கிறேன்.பகிர்ந்திருக்கிறேன். ஆனால் முதல்முறையாக இப்போதுதான் எழுத்தில் பதிவு செய்கிறேன். அதனால் ஒரு வரலாற்றுப்பதிவு போல் கோர்வையாக சம்பவங்கள் நடந்த காலவரிசைப்படி எழுதவது என்பது கொஞ்சம் கடினமாகயுள்ளது. மேலும் பிடித்த விஷயங்கள் தானே உடனே ஞாபகத்திற்கு வரும். ஆகவே சம்பவங்களை மட்டுமே முதன்மைப்படுத்தி பதிவு செய்யவிரும்புகிறேன். என்னைப் பொறுத்தமட்டில் கல்லூரியில் வாசம் செய்த அந்த மூன்று வருடங்களும் மிகச்சிறந்த வருடங்கள்தான். சம்பவங்கள் அனைத்தும் இந்த மூன்று வருடங்களுக்குள் நடந்தவைகள் அவ்வளவே...! அவைகளை முடிந்தளவில் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்.

Tuesday, 14 August 2012

விடுதலை நாள்

அனைவருக்கும் இதயம் கனிந்த சுதந்திர தின நல்  வாழ்த்துக்கள்
வந்தே மாதரம்!!! பாரத் மாதா கீ ஜெய் !!!!

Thursday, 9 August 2012

கிருஷ்ண ஜயந்தி


ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே!
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே!!

அனைவருக்கும் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்

Monday, 6 August 2012

2. ஒரு புதிய திருப்பம்!!

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பசுமை நிறைந்த நினைவுகளே ! என்ற பாடலில் ஓர் அருமையான வரி வரும் “வரவறியாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே“ ஆனால் எங்கள் விஷயத்தில் வரவுமில்லாமல் செலவுமில்லாமல் மகிழ்ந்திருந்தோம். ஆம்! அந்த மூன்று வருடங்களும் நட்பு நதியில் நீந்தி பிரிய சாலையில் நடந்து பாச பயணமாகவே கழிந்தது.

1. என் கனவுக் கல்லூரி!!

இதுவரை கடந்து வந்த வாழ்வின் வழிகளில் நான் மிகமிக சந்தோஷமாகவும் சவுகரியமாகவும் வாழ்ந்த காலங்கள் நிச்சயமாக மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் படித்த காலங்கள் தான்.

Wednesday, 6 June 2012

சந்திப்பின் முனைப்பில் நவரசம்

       சௌராஷ்டிரா கல்லூரியில் B.A Corporate Secretaryship பயின்ற நண்பர்களின் வெள்ளிவிழா சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியன்று மதுரை

Tuesday, 22 May 2012

நண்பர்கள் தொடர்புக்கு வந்த கதை - 2


                29-04-2012 அன்று நண்பர்கள் சந்திப்பு நடத்துவதென முடிவு செய்தவுடன், திருமதி

Monday, 7 May 2012

AMAZING EFFORT TO REKINDLE THE JOY OF TAKING THE ALUMNAE BACK TO YESTERYEARS.


Right from the inspirational speeches by the Hon’ble Principal & Beloved Professors followed by the lighter moments shared by the alumnae,

Friday, 4 May 2012

நண்பர்கள் தொடர்புக்கு வந்த கதை

கிருஷ்ணமூர்த்தி தன் அனுபவங்களை எழுதுகிறார் :
   
     2008 ஆம் ஆண்டு துவக்கத்தில்  கல்லுரி  மாணவர்கள் சந்திப்பு கல்லுரி படிப்புத் தொடங்கிய

Monday, 16 April 2012

Saturday, 14 April 2012

Pongum pudhu varusham

அனைவருக்கும்   இதயம்  கனிந்த  புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்!!!!!!!

Monday, 19 March 2012

Progress

        It is informed that the date of Alumni meet 2012 of B.A Corporate Secretaryship students will be