வார்த்தைகளே ஓவியமாய்......

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் சுவாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை மையமாக இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது. இந்தப் பெருமையைச் சேர்த்தவர், ஜித்திஷ் கல்லட் (Jitish Kallat) என்ற பாரம்பரிய இந்திய ஓவியர். இவர் இந்த இடத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரையை இன்ஸ்டிடியூட்டின் Grand Stairs எனப்படும் மாடிப்படிகளில் வானவில் வண்ணங்களில் வரிசையாகப் பதித்து “Public Notice 3” என்ற பெயரில் ஓவியமாக்கி இருக்கிறார். முதல் படியிலிருந்து படித்துக்கொண்டே ஏறினால் இரண்டாம் தளத்தை அடையும்போது முழு உரையையும் படிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனித்தன்மை.
இவரின் கைவண்ணம் செப்டம்பர் 11, 2010 அன்று, சுவாமியின் சொற்பொழிவிற்கு சரியாக 108 வருடங்களுக்குப்பிறகு காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதன் எழுத்துக்கள் ஒளியால் விளங்குகின்ற சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் அச்சுறுத்தும் நிலைகளைக்குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன
.
.
விவேகானந்தரின் உரையை நினைவுப்பட்டயம் இட்டு புதுமையான கண்காட்சியாக்கி கௌரவித்திருப்பது பாராட்டத்தக்கது.
No comments:
Post a Comment