Tuesday, 22 May 2012

நண்பர்கள் தொடர்புக்கு வந்த கதை - 2


                29-04-2012 அன்று நண்பர்கள் சந்திப்பு நடத்துவதென முடிவு செய்தவுடன், திருமதி
விஜயலட்சுமிகளும், ஞானேஸ்வரி,  நாக நந்தினி என அடுத்தடுத்து தொடர்புகள் வந்தன. இந்த தேதியினை திரு அன்வர் அவர்கள் என்னிடம் magic date என சிலாகித்தார்கள்.  நான் தில்லியை விட்டு 20-4-2012 அன்று கிளம்பினேன். அன்று காலை திரு ஸ்ரீனிவாசன் அவர்களிடம் திரு சேஷய்யன் அவர்களின் அலைபேசி என்னைக் கொடுத்து திருமதி பானுமதி அவர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்குமாறு கூறினேன். அன்று மாலை தில்லியை விட்டு கிளம்புமுன் எனக்கு அடுத்தடுத்து 35) லக்ஷ்மி புவனேஸ்வரி, 36) அனிதா, 37) பாலசுப்ரமணியன், 38) சித்ரா என எண்கள் அணிவகுத்து வந்து கொண்டு இருந்தன.  திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் பானுமதியினை தொடர்பு கொண்டதில் அவர் லக்ஷ்மி புவனேஸ்வரியின் எண்ணைக் கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து அனிதா எண்ணும், அனிதாவிடமிருந்து பாலு மற்றும் 39) ஆனந்த பால்ராஜ் எண்ணும் கிடைத்துள்ளன.  நண்பர் திரு குழந்தைவேல் அவர்கள் சித்ரா அவர்களின் உறவினரிடம் இருந்து அவருடைய எண்ணைப் பெற்று தந்துள்ளார். இவ்வாறு ஒரே நாளில் 5 நபர்களின் எண்களைப் பெற்று தந்த 20-04-2012 ஒரு மந்திர தேதி (Magical Date) என்று சொன்னால் அது மிகை ஆகாது அல்லவா? 
            கடந்த பதிவில் குறிப்பிடத் தவறிய நண்பர் 40) முருகேசன் அவர்கள் பல காலம் முன்பாகவே தொடர்புக்கு வந்து இருந்தார். அவரைக் குறிப்பிட மறந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.  இவர்கள் எல்லாம் தொடர்புக்கு வந்து இருந்தாலும், மதுரையிலேயே இருந்தாலும் தொடர்பு கொள்ள இயலாமல் போன 41) ரமீலா 42) ஷகீலா 43) இராமசாமி மற்றும் பட்டப் படிப்பினை தொடராத நண்பர்கள் 44) லக்ஷ்மணன் 45) நளினி போன்றோர் தொடர்புக்கு வரவில்லையே என்ற மன வருத்தம் எனக்கு இருந்தது.  இதனை அன்வர் அவர்களிடம் பேசுகையில் விவிலியத்தில் இயேசு ஒரு பட்டியில் எத்தனை ஆடுகள் வந்து இருந்தாலும் வந்து சேராத ஆடுகளைக் குறித்து கவலை கொள்ளும் நல்ல மேய்ப்பன் நான் என்று சொல்கிறார். அவர் மன நிலையில் இருந்து ஏசுபிரானின் .0000000001% என்னிடத்தில் இருப்பதற்கு மகிழ்வும் கொண்டேன். 

              இவர்களைத் தவிர நம்முடன் பயின்ற 46) திருமதி லலிதா அவர்கள் சில வருடங்களுக்கு முன் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெரும்பொழுது ஒவ்வாமையினால் (Allergy) காலமனானர்கள் என்ற வருந்தத் தக்க செய்தியினையும் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டி உள்ளது.


 நண்பர்களின் தொடர்ந்த ஆதரவினாலும், அன்பினாலும் நம் வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டா இறைவனின் பேரருள் கருணையினாலும் இப்பணியினை செவ்வனே செய்ய முடிந்தது என்றே சொல்வேன். இப்பணியினை செவ்வனே செய்ய தொடர்ந்த ஆதரவையும் உற்சாகத்தையும் தந்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினையும், இறைவனுக்கு என் வணக்கத்தையும், இப்பணி செய்யும் காலத்தில் தகவல் முன்னேறாத காலம் மற்றும் நண்பர்களிடம் இருந்து எந்த வித ஊக்கமும் வராத காலத்தில் ஏற்பட்ட மனச்சோர்வினை நீக்கி புத்துணர்வு ஊட்டி இப்பணியில் தொடர்ந்து ஈடுபட ஆக்கமும் ஊக்கமும் அளித்த என் மனைவியார் சுதா அவர்களுக்கும் இப்பதிவில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதில் ஏற்பட்ட குறைகளுக்கு என் ஊக்கமின்மையே காரணம் எனக் கூறி 'நண்பர்கள் தொடர்புக்கு வந்த கதை' யினை இத்துடன் நிறைவு செய்கிறேன்.
K கிருஷ்ணமூர்த்தி

6 comments:

VJ said...

Vow! Nice Journey!

Wish it continues!!

EDITOR :-) said...

எனது மனம் கனிந்த பாராட்டுக்கள் என்றென்றும். யாரை எல்லாம் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களை எல்லாம் சந்திக்க வைத்த மேஜிக் மேன் கிருஷ்ணமூர்த்தி. இன்னமும் re union என்ற நிகழ்வில் இருந்து வெளியில் வரவில்லை நான்

1 kg. சுகருடன்

N.M. அன்வர் ஹுசைன்

EDITOR :-) said...

The comment sent to email id by Mr. Anvar Hussain is published here. Thanks Anvar.

Anonymous said...

the long journey of my mind about 25 years. i thank the man like tortoise in his action in early days. but he became strongest one like the same in living as the same creature.it is my pleasure and my goddess if she not allow me i am unable to participate that one.i thank her once again.if she permits the circle once again rotate us in this same enjoyable moments. i closely watched kk to take continuous effort seriously and energetically.my goddess must showering all the blessings to him and his family forever. and i must say about my friends effort those who is always think kk as comedy peace mr.seeni and anwar and some other who is not reavealing their thinkings after some times they are also giving timely support to him

சிறியவன் said...

Mr/Ms Anonymous thank you for visit and comment. If u publish in your name it will make us very happy. Even now I am a comedy peace. you know anybody can be hero like dhanush etc., but no body can beat charlie I want to be charlie than dhanush. K. Krishnamurthi

சிறியவன் said...

Unknown is Mr. Nagarajan. I had talk with him once again I thank him for the comment. K. Krishnamurthi