Monday, 27 August 2012

4. பேராசிரியர்களுடன் நாங்கள்!!

பேராசிரியை சாந்தா மேடம் எப்படி எங்களுக்கு ஆரம்பகாலங்களில் பீதியைக் கொடுத்தார்களோ? அதற்கு மாற்றமாக பேராசிரியர்களான பாலகிருஷ்ணன் சார் மற்றும் மோகன் சார் அவர்கள் மிகவும் நட்புடன் பழகியிருந்தார்கள். பாலகிருஷ்ணன் சார் மிக மிக அதிர்ஷ்டசாலி...! அவர் நடத்திய பாடங்களெல்லாமே easy ஆகவும்interesting ஆகவும் இருந்ததால் அவர் எடுக்கும் வகுப்புகளெல்லாம் ரொம்ப ஜாலியாய் கலகலப்பாயிருக்கும். நாங்கள் எப்பவும் கலகலப்பாயும் இலேசான மனதுடன் இருக்கவேண்டுமென்று அடிக்கடி சொல்வார்.
 கடைசி வரை அதேபோல் நடந்தும் காட்டினார். எப்பவும்
 மைல்ட் டான புன்னகையுடன்,  அதிர்ந்து பேசாமல் நட்புரீதியான அணுகுமுறையுடன் பாடங்களைப் பற்றி பயமுறுத்தாமல் எதிர்கால கவலைகளைப் பற்றி கூறி எரிச்சல்படுத்தாமல் வலிமையான தோற்றத்தில் இளகிய மனதுடன் பழகி ஓரு இனிய மனிதராக எங்களுடன் ஐக்கியமாகிவிட்டார். கல்லூரிகாலத்திற்கு பிறகும் அவர் அதேபோல்தான் பழகிவருகிறார். ‘பண்பிற்கு பாலகிருஷ்ணன்’ என்று இலக்கணமாகி விட்டார்.

எங்கள் வகுப்பு மாணவர்களால் அதிகம் மிரட்டப்பட்ட மிரட்சியடைந்தபேராசிரியர் மோகன் சார் மட்டுமே....! இப்போது நினைத்தாலும்கொஞ்சம் வருத்தமாகயிருக்கிறதுநல்லபடித்த மனிதர். பாடங்களில் ஆழ்ந்த அறிவுமிருந்தும் அவரிடம் இயல்பாகயிருந்த பய உணர்ச்சி எங்களுக்கெல்லாம் அல்வா.... சாப்பிட்டது போலாகிவிட்டது. வடிவேல் சொல்வதுபோல் எங்களுக்கு ஓரு அடிமையாகவே சிக்கிவிட்டார். அவரை வைத்து நிறைய காமெடி பண்ணியிருக்கிறோம். இயல்பாகவே பெரிதாகயிருக்கும் அவர் கண்களை  அடிக்கடி பீதியடைய வைத்து மேலும் மேலும் பெரிதாக்கிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். அய்யோ...... பாவம் அவர்... எங்களிடம் மாட்டிய கைப்பிள்ளையாக்கும் அவர்..........

எங்கள் பாடப்பிரிவு கல்லூரியில் தனித்துறையாகப்பிரிக்கப்பட்டு அதற்கு தலைவராக திரு.சோ.சோ.மீனாட்சிசுந்தரம் அவர்களும் அவர் தலைமையின் கீழ் திரு.பாலகிருஷ்ணன், திரு.மோகன் மற்றும் செல்வி.சாந்தா அவர்கள் மட்டுமே இருந்ததால் பெரும்பான்மையான பாடங்களை இந்த நால்வர் அணியில் உள்ளவர்களே நடத்தினார்கள். ஆகவே எங்களுக்கு அதிகமான பேராசிரியர்கள் அறிமுகம் செய்துவைக்கப்படவில்லை.

ஆங்கிலப்பாடத்திற்கும், கணக்குப்பதிவியலின் சில பிரிவு பாடங்களுக்கு மட்டும் சில பேராசிரியர்கள் வந்துபோனார்கள். ஆங்கிலப்பாடங்களைப் பொறுத்தமட்டில் ‘வுச்சு ராஜசேகரன்’ (இவர் பாடம் நடத்தும்போது which என்னும் வார்த்தை அடிக்கடி அழுத்தமாக உபயோகிப்பார். ஆகவே நாங்களும் அவருக்குப்பிடித்த அந்த வார்த்தையையே அவருக்கு அடைமொழியாக கொடுத்துவிட்டோம்). திரு.ராமனுஜம், திரு.ராம்பாபு, ரவிகுமார் அவர்களும் கணக்குப்பதிவியலின் சிலபிரிவுகளுக்கு NRK, திரு.N.S.சேதுராம் போன்றவர்கள் பாடம் நடத்தினார்கள். இவர்களில் மறைந்த திரு.சேதுராம் அவர்களைப்பற்றி விரிவாக அறிமுகம் செய்யவேண்டும். அந்தளவிற்கு எங்களை வயிறுவலிக்க சிரிக்க வைத்த ‘strict professor’. மறைந்த சிரிப்பு நடிகர் கல்லாபெட்டி சிங்காரம் போலிருப்பார். ஆனால் வகுப்பில் நுழையும் போதே டைட் மேக்கப்புடன் தான் நுழைவார். திட்டு திட்டாகயிருக்கும் பவுடருடன் அடிக்கடி ஆண்மாணவர்களை திட்டி...... திட்டி....!  எக்கி ....எக்கி..... வார்த்தை உச்சரிப்புகளில் துப்பி....! துப்பி....! அவர் பாடம் எடுக்கும் அழகை நினைக்கும் போதெல்லாம் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். வகுப்பெடுக்கும் காலமெல்லாம் கண்டிப்பும் கறாருமாகவே வலம் வந்த காமெடிகிங் அவர் ........

ராஜகோபால், மகாதேவன் அவரின் மாணவ இடைஞ்சலாக செயல்பட்டார்கள். இவர்கள் இரண்டு பேருமே அவருடைய கோபத்தின் உச்சத்தை உலகறிய வைத்தவர்கள். ஒருசமயம் அவர் ரொம்ப மும்மரமாகவும், சுவையோடும் (அவருக்கு மட்டும்) பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் மகாதேவன் ரொம்ப சாவதானமாக வகுப்பில் நுழைந்து பெஞ்சில் உட்கார போகும்போது அவர் அவனை கவனித்துவிட்டார். அவன் உடனே ரொம்ப கூலாக ‘May I come in Sir’ என்றான். அவருக்கு வந்ததே ஆத்திரம்...  கவிஞர் வாலி எழுதியது போல் ‘அடங்கா சினம் கொண்டு அள்ளினான் கொக்கை; வாளால் இருகூறாய் பிளக்க அரக்கன் ஆகினான் சக்கை’ என்ற கணக்கில் கையிலுள்ள சாக்பீஸை ஜெட் வேகத்தில் அவன் மீது எறிந்து ‘என்னா மேன் உட்கார்ந்துவிட்டு உள்ளே வரவா என்று கேட்கிறாய் Get out I Say’ என்று காட்டு கத்தலாய் கத்த மகாதேவன் குமுறும் சிரிப்புடனும் குதூகலத்துடனும் வகுப்பை விட்டு வெளியேறினான்.

அவர் பெரும்பாலும் ஆணித்தரமாகத்தான் பாடமெடுப்பார் சாக்பீஸால் முன் பெஞ்சில் குத்தி குத்தி..... குதித்து குதித்து தான் பாடம் நடத்துவார். அவர் குத்துவதால் ஏற்படும் சாக்பீஸ் புள்ளியை மகாதேவன் ரொம்ப சின்சியராய் அழிப்பான். அவன் அழிக்க அழிக்க அவர் மேலும் வீறுகொண்டு அதிகமாய் குத்த ஆரம்பிப்பார்.

ராசகோபால் அவரிடம் அவர் சொல்வதுபோலவே yes sir என்று சொல்லி சொல்லி வெறுப்பேற்றுவான். அவர் என்ன நடத்தினார்? எப்படி விளக்கினார் என்பதெல்லாம் சுத்தமாக ஞாபகமில்லை.  ஆனால் அவரை எப்படியெல்லாம் சமாளித்தோம் அவரால் எப்படியெல்லாம் சந்தோஷப்பட்டோம் என்பதனை மறக்கவே முடியவில்லை.

சாந்தா மேடத்திடமும் இதேபோல் பல சந்தர்ப்பங்களில் முட்டி மோதியிருக்கிறோம். ஒருதடவை  Law  பாடம் ஒன்றை உயிரைக் கொடுத்து (பெரும்பாலும் எங்கள் உயிரையெடுத்து) நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் nominee என்ற வார்த்தை பிரயோகம் அதிகமாக வந்துக்கொண்டிருந்தது. நாகராஜன் அதற்கு எதுகை மோனையாக காமினி, யாமினி என்று என்னிடமும் மகாதேவனிடமும் சொன்னதும் இருவரும் உடனே சத்தமாக சிரித்துவிட்டோம். சாந்தா மேடம் சண்டமாருதமாக மாறி எங்கள் மூன்று பேரையும் ‘போங்கோ....! இங்கு சிரித்தது போலவே வெளியில் போய் சிரியுங்கோ... உங்களைப்பார்த்து இந்த ஊரே சிரிக்கட்டும்’... என்று வாழ்த்தி வகுப்பைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். என் வாழ்க்கையில் முதன்முறையாக அன்றுதான் வகுப்பைவிட்டு வெளியேற்றப்பட்டேன்.

ஆனால் அன்று நாங்கள் மூவரும் செம கூலாகயிருந்தோம். புழுக்கமான இடத்தைவிட்டு வெளியே வந்ததுபோல் உணர்ந்தோம். சிரிப்பு அடங்காமலே.......நடந்துசென்று காண்டினை அடைந்து ரிலாக்ஸ்டா டீ சாப்பிட்டுவிட்டு மரநிழலில் அமர்ந்து நடந்ததை மறந்து இன்னும் அதிகமாக பேசி சிரித்து அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டோம்.

அதே law பாடத்தின் இண்டெர்னல் தேர்வில் முட்டை மார்க் போட்டு என் வாழ்க்கையின் முதல் அதிர்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார்கள். நாங்கள் மட்டுமல்லாமல் கல்லூரியின் மற்ற மாணவர்களும் மேடத்திற்கு இடைஞ்சல் செய்தனர். அந்த சமயத்தில் பிரபலமாகயிருந்த ‘சாந்தா டில்ட்டிங்க் வெட் கிரண்டர்’ என்ற விளம்பரப்பாடல் கல்லூரியெங்கும் தேசியகீதம் போல் பாடப்பட்டது. மேடம் செல்லும் வழியெல்லாம் பேக்ரௌண்ட் இசையாகவும் மாணவர்களால் இசைக்கப்பட்டது.


உலா தொடரும்...........

2 comments:

VJ said...

படித்து விட்டு சிரிப்பு அடங்க வெகு நேரமானது.

அந்த நாட்களிலேயே இருப்பது போல் ஒரு உணர்வு வந்தது.

Thanks for bringing out the memories!!

Anonymous said...

s. at that time v r very happy to evade madam's class. becoz i and devan both r having very very happy mood to xit the madam class.