திரு சொ.சொ.மீ. அவர்கள் தில்லியில் 15.09.2012 அன்று நடந்த அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் “பக்தி இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றிய போது பதிவு செய்யப்பட்டது.
பின்வரும் பாடல்களைத் தன் உரையில் குறிப்பிடுகிறார் :
பரிபாடல்
யா ஆம் இரப்பதை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்அருளும் அன்பும் அறனும் மூன்றும்
திருமந்திரம்
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
திருஞான சம்பந்தர்
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாம்மே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே
திருவாசகம்
ஏசினும், யான் உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைத்து வேசறு விடுதி கண்டாய்
அடைக்கலப்பத்து
மாவடு வகிர் அன்ன கண்ணி பங்கா!நின் மலர் அடிக்கே
கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்;
பா இடை ஆடு குழல் போல், கரந்து பரந்தது, உள்ளம்,
ஆ, கெடுவேன்;உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
(திரு சொ சொ மீ சுந்தரம் அவர்களின் உரைக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்)
(திரு சொ சொ மீ சுந்தரம் அவர்களின் உரைக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்)
2 comments:
நிகழ்ச்சியில் நேரில் பங்கு பெற்ற நானும் விஜியும் பாக்கியசாலிகளே. விஜியின் படத் தொகுப்பு அருமை. camerawoman விஜயலட்சுமி ஞாபகத்திற்கு வருகிறார்கள்.
சமையலும் நன்றாகயிருந்தது பரிமாறிய விதமும் நன்றாகயிருந்தது. " தடுமலுக்கு ஒரு மாத்திரை தலைவலிக்கு ஒரு மாத்திரை தப்பித்தவறி உபயோகித்தால் தர்மலோக யாத்திரை " என்று சொ சொ மீ அவர்கள் கூறியதை கேட்டதும் படக் ' கென்று சிரிப்புப்பற்றிக்கொண்டது. பாக்கியசாலிகளுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பரிமாறியவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
Post a Comment