Tuesday, 28 August 2012

பேராசிரியர்களும் நானும்


              கல்லூரிக்காலங்களில் சற்று துறவு மனப்பான்மை, தாழ்வு மனப்பாமை வாழ்வே நடத்தி வந்தேன். யாரோடும் அதிகம் பழகமாட்டேன். எதையும் serious ஆகவே பார்ப்பேன். இதில் சில விஷயங்கள் இப்பொழுதும் தொடர்ந்தாலும் என்னுள் இயல்பாக இருந்த நகைச்சுவை உணர்வை வெளியில் காட்ட ஆரம்பித்த பின்பே என் வாழ்வில் பல மாற்றங்கள் வந்தன.
இது பெரும் முன்னேற்ற்ம் தந்ததாஎன்றால் அப்படி ஒன்றும் இல்லை எனினும், இன்னும் கீழ் போகாமல் தடுத்தது.
நான் நகைச்சுவை உணர்வு உடையவன்தான் என்று கல்லூரி காலத்தில் (இனி க.கா) கூறி இருந்தால் அதுவே பெரும் நகைச்சுவையாய் இருந்திருக்கும். க.கா நான் பேசத் துவங்கினால் அதில் தெறிக்கும் தத்துவ முத்துக்களை கேட்கச் சகியாமல் ஓடிய நண்பர்களும் உண்டு. அப்பொழுது நம் வகுப்பு நண்பர்களை விட B.Sc (Maths) நண்பர்கள் நெருக்கமாக இருந்தார்கள். என்னை அதிகம் சேர்க்காமல் இருந்தாலும் முதல் bench மாணவன் என்பதால் அன்வர் மற்றும் நாகராஜன் நண்பர்களாக (?) இருந்தார்கள். திரு உபேந்திரன், கிரிதரன் ஆகியோருக்கு நான் நண்பனாக இருந்தேன். இவர்கள் இருவரும் மற்றவரோடு பழகுவது வெகு குறைவே. நான் வகுப்பில் கலகலப்பாய் இல்லாவிட்டலும் என்னை வைத்து (என்னை comedy piece ஆக வைத்து) என் நண்பர்கள் கலகலப்பாய் இருந்து இருக்கிறார்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது. 

நான் நண்பர்களுக்கு மட்டுமல்லாமல் பேராசிரியர்களுக்கும் குறிப்பாக திரு சொ சொ மீ அவர்களுக்கு comedy piece களஞ்சியமாக இருந்தேன். திரு  சொ சொ மீ அவர்களைப் பற்றிய என் நிகழ்வுகள் அதிகம் என்பதால் அவருடனான நிகழ்வுகளைப் பின்னர் எழுதுகின்றேன்.

முதலில் மறைந்த திரு N.S. சேதுராம் அவர்களைக் குறித்து.  அவர் வகுப்பில் பாடம் நடத்தும் விதம் குறித்து அன்வர் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.  திரு சேதுராம்   அவர்கள் திரு  சொ சொ மீ  அவர்கள் வரும் வரை நமது HOD ஆக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அவர் வகுப்பில் ஒருமுறை முதல் பெஞ்சில் அமர்ந்து கொண்டு காலை ஆட்டிக் கொண்டு இருந்தேன்.  அவர் 'கால ஆட்டதே மேன் ' என்று சொல்லியும் காலை ஆட்டிக் கொண்டு இருந்தேன். வந்ததே கோபம் அவருக்கு, அவர் ஆயுதமான சாக்பீஸை என் மீது எறிந்தார். அவர் அவ்வாறு கோபப் பட்டதற்கு நான் வருத்தப்படவில்லை, அவ்வாறு  அவர்  கோபம்  கொள்ளுமாறு  நடந்து கொண்டதற்கு  வருத்தம் கொள்கின்றேன்.

அவருடனான மற்றொரு சம்பவம், நானும் க.கா.த்தில் ஏமாற்று வேலை செய்துள்ளேன் என்பதை தெரிவிக்கவே.  ஏதோ ஒரு paper, அதன் assignment ஏனோ  submit செய்யவில்லை. அது வெள்ளிக் கிழமை, அன்றே கடைசி தினம்.  அவரிடம் "sir, எனக்கு இன்னும் 3 தினம் கொடுங்கள் நான் திங்கள் கிழமை assignment sumbit செய்கிறேன் என்றேன்.  அவர் மறுத்துவிட்டார்.  உனக்காக நாளை ஒரு நாள் தருகிறேன், நாளை விடுமுறை எனவே என் வீட்டிற்கு வந்து பேப்பரை submit செய் என்று சொல்லிவிட்டார். காலம் மிகவும் குறுகியதாய் இருந்தது. Assignment prepare செய்ய time இல்லை. அப்பொழுது ஆபத் பாந்தவனாய், அனாத ரக்ஷகனாய் மகாதேவன் உதவி செய்தான். மகாதேவனின் பேப்பரை வாங்கி முன், பின் பக்கங்கள் மட்டும்  மாற்றம் செய்து அதையே கொண்டு போய் அவரிடம் மறுநாள் கொடுத்தேன்.  அவர் வீட்டில் எனக்கு காபி உபசாரம் எல்லாம் நடந்தது.  அவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. அதன் பின்னர் அவர் ஒரு வசனம் கூறினார், இன்றும் என் காதில் ஒலித்து, சிரிப்பையும் வேதனையையும் உண்டாக்கும். அது "கிருஷ்ணமூர்த்தி நீ சாதிச்ச்சிட்டையா, மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்னு சொல்லுவாங்க, அத நீ செஞ்சுட்ட" என்றார். அப்பொழுது  இவ்வளவு  அப்பாவியா  இருக்காரேன்னு  இருந்துச்சு. 

மீதிக் கத  அப்பறம் ........

4 comments:

Anvar Husain said...

கிருஷ்ணமூர்த்தி நீ சொன்னது போல் முதல் பெஞ்சில் நாம் அமர்ந்திருந்தும் நட்பு விஷயத்தில் ? சரிதான். உன்னை வைத்து நாங்களெல்லாம் கலகலப்பாகயிருந்ததும் உண்மை. குறிப்பாக சீனிவாசன் உன்னால் ரொம்ப கலகலப்பாகயிருந்திருக்கிறான். உன் பயணம் தொடர வாழ்த்துகிறேன்

சிறியவன் said...

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோகானகத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லாரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே

தாமரை நான் என்பது அறிந்தார் B.Sc மாணாக்கர்

VJ said...

As already said, a BIG Welcome!

It's really heartening to find slowly this blog gets its incitement & inspiritment!!

Buck up!!!

VJ said...

என்னே ஒரு தன்னடக்கம்?!!