ஆங்கிலப் பேராசிரியர்களைத் தொடர்ந்து வருகிறார் நமது அன்புச் சகோதரராய் நடந்து கொண்ட திரு T.S. பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் கோபப் பட்டு ஒருநாளும் கண்டதில்லை.
ஒரு கடுஞ்சொல்லும் சொன்னதில்லை. வருவார் அன்றைய தினப் பாடம் ஏதேனும் நடத்துவார். அது அரை மணி நேரக் கூறுக்கு மேல் இருக்காது. பின்னர் மாணவர்களான எங்களுடன் அளாவத் தொடங்கிடுவார். தன்னால் எந்த மாணவனும் துன்பப் பட்டான் என்ற நிலை வரக் கூடாது என்று நினைத்தவர். அவ்வப் பொழுது வாழ்கையின் தத்துவங்களை எளிய முறையில் சொல்லிக் கொண்டுதான் இருந்தார். அப்பொழுதைய வயது, அதனை முழுமையாய் கிரஹித்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றவில்லை.
ஒரு கடுஞ்சொல்லும் சொன்னதில்லை. வருவார் அன்றைய தினப் பாடம் ஏதேனும் நடத்துவார். அது அரை மணி நேரக் கூறுக்கு மேல் இருக்காது. பின்னர் மாணவர்களான எங்களுடன் அளாவத் தொடங்கிடுவார். தன்னால் எந்த மாணவனும் துன்பப் பட்டான் என்ற நிலை வரக் கூடாது என்று நினைத்தவர். அவ்வப் பொழுது வாழ்கையின் தத்துவங்களை எளிய முறையில் சொல்லிக் கொண்டுதான் இருந்தார். அப்பொழுதைய வயது, அதனை முழுமையாய் கிரஹித்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றவில்லை.
அவர் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் முழு சுதந்திரம் கொடுத்தார். சொ சொ மீ அவர்கள் மாணவர்களை அடக்கி வைத்து இருக்க வேண்டும் என்பது போல் நடந்து கொள்ள மாட்டார், ஆனாலும் மாணவர்களே அடங்கி இருக்கும் வகையில் அவர் கம்பீரம் அமைந்து இருக்கும் என்றால், திரு பாலக்ருஷ்ணன் அவர்கள் தோற்றம் அமைதியாய் இருக்கும் அவர் வகுப்பில் சுதந்திரம் பெற்று இருந்தோம், ஆனாலும் அவர் பெயர் கெடக் கூடாது என்பதற்காகவே சுதந்திரத்தை அமைதியாய் அனுபவித்தவர்கள் நாங்கள்.
அவர் எங்களை நட்பாய் நடத்தியதாலோ என்னவோ, அவர் சம்பந்தப் பட்ட பேப்பர்களில் யாருமே அரியர்ஸ் வைத்ததில்லை. எப்பொழுதுமே 1௦௦00 விழுக்காடு தேர்ச்சியே இருக்கும். அவருடைய ஷ, ஸ உச்சரிப்பு பேதம் சற்று அவஸ்த்தைப் படுத்தும். இங்க்லீஷ் என்றும் இங்க்லீஸ்தான். அதனால் குறை ஒன்றும் இல்லை. அவர் முதல் பெஞ்சில் இருந்த எங்களுடன் அதிகம் பேசுவார். வழக்கம் போல் அன்வரும் நாகராஜனும் அவரை ஏதும் சொல்லிக் கிளப்பி விடுவார்கள். அவர் வகுப்பில்தான் அன்வர் - ராசகோவாலின் இன மோதல் நடந்தது. அதை அன்வர் பின்னர் விவரிப்பார் என நினைக்கிறேன்.
மீதிக் கத அப்பறம்..
5 comments:
சொ.சொ.மீ சார் மாணவர்களை அடக்கி வைத்திருந்தார் என்று சொல்லுவது சரியாகாது. அவருடைய கம்பீரம், சப்ஜெக்டில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவு, அதிகம் கோபப்படாத முதிர்ச்சியான மனநிலை, இவை எல்லாம் மாணவர்களின் மத்தியில் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது என்பது தான் சரி. அவரது இந்த குணங்களின் காரணமாக மாணவர்கள் தாங்களே அவரது வகுப்பில் அடங்கி இருந்தார்கள் என்பதும் தான் உண்மை.
T.S.B. சாரின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது. அவர் முதல் பாதி வகுப்பில் பாடத்தை சுருக்கமாக விளக்கிவிட்டு மீதிப்பாதி வகுப்பில் மாணவர்களையே அவர்களுக்கு புரிந்ததை விளக்கச் சொல்லுவார். இது ஒரு வகையில் மாணவர்களுக்கு பேச்சு சுதந்திரத்தையும் மற்ற வகையில் அவர்களே பாடத்தை தெளிவு படுத்திக்கொள்ளும் திறனையும் வளர்த்தது என்பதால் அவர் சம்பத்தப்பட்ட பாடத்தில் 100% தேர்ச்சி சாத்தியமானது. இது எப்படி என்றால் -
When we hear, we forget.
When we hear and see, we remember.
When we question and discuss, we begin to understand.
When we teach another, we master.
T.S.B. சார் வகுப்பில் மாணவர்களின் முறையின் போது சக மாணவர் லக்ஷ்மண் பேச துவங்கினார், சற்று கலாய்ப்பாகவே இருந்தது அவரின் பேச்சு. பாடம் விஷயத்தை விட்டு வேறு எங்கோ போக எல்லோரின் பேச்சு சிரிப்பு சத்தமும் தான் பெரிதாக கேட்டது. சாருக்கோ தர்ம சங்கடமாய் போய் விட்டது, அதிர்ந்து பேசாத அவரின் சுபாவம் மாணவர்களை கடிந்து கொள்ள தடையாய் இருந்தது. செய்வதறியாது முன் பெஞ்சில் இருந்த எங்களைப்பார்த்து சற்று புன்னகைத்தார். நான், “ஏண்டா இவர்களை பேச அனுமதித்தோம் என்று தோன்றுகிறதா சார்” என்றேன். அவர் உடனே ஆச்சரியத்துடன் உங்களுக்கு psychology தெரிந்திருக்கு, நீங்கள் BCS க்கு பிறகு அவசியம் அதை develop செய்து கொள்ளுங்கள் என்றார்.
//சொ சொ மீ அவர்கள் மாணவர்களை அடக்கி வைத்து இருக்க வேண்டும் என்பது போல் நடந்து கொள்ள மாட்டார், ஆனாலும் மாணவர்களே அடங்கி இருக்கும் வகையில் அவர் கம்பீரம் அமைந்து இருக்கும்// விஜி, என்னுடைய எழுத்தை மறுதலித்து நான் கூறியதை மீண்டும் பதிவு செய்தமைக்கு நன்றி.
விஜி கூறிய அந்த நாள் சற்றே மங்கலாக நினைவில் இருக்கிறது. சார் சொன்னதைப் போல் Psycholgy இல் Develop செய்துள்ளாயா?
tsb sirukku appave psyc nalla theriyum ivanungalukku subject kasappai thaen thadavithaan tharanumnu
Post a Comment