திரு சேதுராம் அவர்களைப் பற்றிய முந்தைய பதிவிற்குப் பின் தற்பொழுது ஆங்கிலத்துறை சார்ந்த பேராசிரியர்கள் குறித்து. நமக்கு, திருவாளர்கள் பிரேம்பாபு, மோகன்ராம், ராமானுஜம், ராஜசேகரன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர்.
திரு பிரேம் பாபு அவர்கள் வகுப்பில் ஆங்கிலத்தில் ஒரு கதை போல் சொல்லி விடை சொல்லச் சொன்னார். ஒரு கண்காட்சியில் பூச்சிகளுக்கான ஒரு பகுதி இருந்தது, அதன் முடிவில் HUMBUG என்ற ஒரு பெயரிடப்பட்ட பெட்டி இருந்தது, அதில் என்ன இருந்திருக்கும் என்று கேட்டார். நண்பர்களே அந்நாளை நன்றாய் நினைவு கூர்ந்து பாருங்கள். நீங்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. நான்தான் கண்ணாடி, Mirror என்று சொன்னேன். திரு பிரேம் அவர்கள் சரியான விடை என்று சொல்லி clap செய்யச் சொன்னார். அன்று ஏனோ மனப்பூர்வமாக யாரும் அதற்கு கை தட்டவில்லை. இது போல மொக்கை பதிலுக்கு எதற்கு என்று நினைத்து இருக்கலாம். அதற்காய் அவர் என்னிடம் மிகவும் வருந்தினர். நான் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டேன். அதுதான் உண்மையும் கூட. இப்பொழுதும் யாரும் கை தட்டிவிட வேண்டாம், அருகில் இருப்போர் தவறாய் நினைக்கக் கூடும்.
திரு பிரேம் பாபு அவர்களின் திருமணத்திற்கு சென்று இருந்தேன். மாப்பிள்ளை அழைப்பு கார் திருமண மண்டபத்தை நெருங்கும் நேரம். உள்ளே அவரிடம் ஏகப்பட்ட பொருட்கள், பால் சொம்பு, அரச இலை என ஏகப்பட்டது இருந்தது. அவர் கிருஷ்ணமூர்த்தி கொஞ்சம் உள்ளே வந்து இத வச்சுக்கிட்டு எனக்கு ஹெல்ப் பண்ணுப்ப என்றார். நானும் அவருடன் சென்றேன். அதனாலேயே அவரை மணவறையில் அமர வைக்கும் மாப்பிள்ளைத் தோழனாக நான் ஆக்கப் பட்டேன். ஆசிரியர் ஒருவருக்கு மாணவன் தோழனாய் இருந்தது நானாக மட்டும்தான் இருப்பேன். திரு பிரேம் அவர்கள்தான் கிரிதரனுக்கு மாப்பிள்ளை என்ற நாமகரணத்தை செய்தவர். ஒரு சனிக் கிழமை தழைய தழைய வேட்டி கட்டிக் கொண்டு வந்த கிரிதரனுக்கு சந்தோஷமாய் பெயர் சூட்டினார்.
வுச்சு ராஜசேகர் அவர்கள் என்னிடம் அதிகம் பழகியதில்லை, ஆனால் அவருடனான ஒரு சம்பவம் இன்றும் என் மனத்தில் உயர்ந்த இடத்தில் அமர்ந்துள்ளார். ஒரு semestar தேர்வுக்கு வழக்கம் போல் சற்று நிதானமாக வந்து கொண்டு இருந்தேன். மதிய நேரத் தேர்வு. சுட்டெரிக்கும் வெய்யில். மூலக்கரை பக்கமாய் வருகையில் அருகில் சிறு மிதிவண்டியில் திரு ராஜசேகரன் வந்து கொண்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் அதிர்ச்சி. என்ன தம்பி இப்பத்தான் வரீங்களா? exam ஆரம்பிச்சிருமே, நீங்கள் என் சைக்கிள எடுத்துக்குங்க நான் நடந்து வந்துர்றேன் என்று சொன்னார். அப்பொழுது அவர் எப்படி இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும், (இப்பொழுது வயதான காரணத்தினால் slim ஆகிவிட்டார்). நான் அன்பாய் மறுத்து விட்டு அவரிடம் exam ஆரம்பிக்கும் முன்னர் இத்தனை மணிக்கு அங்கு இருப்பேன் என்று சொன்னேன். அவர் நான் சொன்ன நேரத்திற்கு வர இயலாது என்று முடிவு செய்து விட்டார். மீண்டும் வற்புறுத்த, நான் மறுத்து விட்டு நான் சொன்ன நேரத்தில் அங்கு இருப்பேன் என்றேன். சந்தேகத்துடன், திரும்பி திரும்பிப் பார்த்தவாறே, வருத்தம் தோய்ந்த முகத்துடன் சென்று விட்டார். நான் கோபாலி மலையின் வலப்புறப் பாதை, அதாவது மூலக்கரையில் இருந்து நேராக சென்று கல்லூரியை வந்தடைந்தேன். முன்னரே அவ்வழியில் வந்து இருந்ததால் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை கணக்கிட்டே அவரிடம் நேரத்தை சொன்னேன். நான் கல்லூரியில் இருக்கும் பிள்ளையார் கோயில் அருகில் வரும் போது பிரதான வாயிலில் (அதாவது principal அறை அருகே) திரு ராஜசேகர் நின்று கொண்டு இருந்தார். நான் வரும் நேரத்தை தன் கை கடிகாரத்தில் பார்த்துக் கொண்டு இருந்தார். நான் அவர் அருகில் சென்றவுடன், முள் அங்கே இங்கே போகல என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். தன்னிடம் படிக்கும் மாணவன் துன்பப் படக்கூடாது என நினைத்து தன் வாகனத்தை கொடுக்க நினைத்த அவர் பெருந்தன்மையை நான் மறந்தால், நன்றி கெட்டவன் என்பதில் முதலிடம் எனக்குத்தான்.
மீதிக் கத அப்பறம்.....
5 comments:
Vow! பயங்கர அறிவிப்பில் தொடங்கி, மள மளவென ஜெட் வேகத்தில் பிரவாகமாய் பிரமாதமாய் வெளி வருகிறதே!!
பலே பலே!!!
@VJ தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி.
கிருஷ்ண நீ சொன்னதில் பாலகிருஷ்ணன் சார் பாடங்களில் 100% வெற்றி என்ற விபரம் கேட்க அருமையாகயள்ளது. ராசகோபால் கூட அவர் சப்ஜக்ட்டில் பாஸாகிவிட்டானா ..? கொஞ்சம் தெளிவுப்படுத்தேன்
நமக்கு முதல் மொழித் தாளாக ஆங்கிலமும், இரண்டாம் மொழித் தாளாக தமிழ் மற்றும் ஹிந்தி போன்ற மொழிப் பாடம் இல்லாமல், Business correspondece போன்றவைதான் இருந்தன. அவற்றில் எனக்குத் தெரிந்து ராசகோவாலு உட்பட அனைவரும் தேர்வு பெற்றோம். ஆங்கிலத்தில் எல்லோருக்கும் ஊற்றிக் கொள்ள, ராஜகோபால் மட்டும் தேர்வு பெற்றுவிட்டார். நீ மட்டு எப்படி பாஸ் பண்ண? என்று சொ சொ மீ அவர்கள் கேட்க நான் Don Bosco ல படிச்சேன் சார் என்ற அவரின் பதில் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
really its news
Post a Comment