இன்று ஆசிரியர் தினம், இந்நாளில் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன். நம் அனைவருக்கும் அன்னையே முதல் ஆசிரியர், அவருக்கும், தந்தைக்கும், கல்விச்சாலைகளில் பாடம் கற்றுத்தந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், வாழ்வில் நமக்குப் பல உண்மைகளை கற்றுக் கொடுக்கும் உடன் வாழும் மக்களும் ஆசிரிய பெருமக்களே ஒருவகையில். அவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.
ஒரு ஆசிரியர் என்பவர் தன் குண நலன்களால் மாணவச் செல்வங்களை கவர வேண்டும். தன்னைப் போல் - ஏன் தன்னை விடவும் உயர்ந்த நிலையில் தன் மாணவனை வைத்துப் பார்க்கும் உயர் மனம் கொண்டவர்கள். அந்த ஆசிரியர்கள் வரிசையில் வந்துள்ள எண்ணற்றோர் என் வாழ்விலும் உண்டு. நிற்க (உடனே எந்திரிச்சு நிக்கக் கூடாது, இது கட்டுரை எழுதும்போது எழுத வேண்டிய வாசகம்).
அன்வர் நாகுவின் வீர தீரப் பராக்கிரமம் ஒன்றை சொன்னார் அல்லவா ? அதுதான் "வண்டு வதைப் படலம்". அந்த வதம் திரு மோகன் சாரை அந்த வண்டிடம் இருந்து காப்பாற்றவே நடந்தது. ஆனால் அது போல் பல வண்டும் குளவியும் மாணவர்கள் ஆகிய நம்மை விட அதிகம் அவரை சோதித்துள்ளன வகுப்பறைகளில்.
அவர் நல்ல முறையில் பாடங்கள் நடத்துவார் என்று கூறினேன் அல்லவா, ஆனால் நான் நல்ல முறையில் படித்ததில்லை. ஒரு internal தேர்வில் கேட்கப்பட்ட Define costing என்ற கேள்விக்கு என் அருமையான பதில், costing is the subject which studies about the cost. மோகன் சார் வகுப்பில் paper ஐ கொடுக்கும் பொழுது ஒரு மாணவர், அவர் பெயரை சொல்ல மாட்டேன். அவர், costing கிற்கு இதுவரை யாரும் சொல்ல முடியாத விளக்கம் கொடுத்துள்ளார் என்று கூறிவிட்டு மேற்படி என் பதிலைக் கூறினார். வகுப்பில் மோகன் சார் கூட joke சொல்கிறார் என சந்தோஷப் பட்டனர்.
நானும் நாகுவும் ஒரு முறை கல்லூரியில் இருந்து திரும்பி வருகையில், பேருந்து நிலையம் அருகே 'சீரடி சாய்பாபா' என்றத் திரைப் படத்தின் poster பார்த்தோம். நான் நாகுவிடம் கூறினேன். அவர் சீரடி சாய் பாபா அவரை நம்பினால் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும், நீ சீரழி நாக பாபா உன்னை நம்பினோர் சீரழிவர்கள் என்று சொன்னேன். அதைக் கேட்டு கொண்டு பின்னல் வந்து கொண்டு இருந்த மோகன் சார் மிகவும் tension ஆகி பெரியவங்களை கேலி பண்ணக் கூடாது என்று சொன்னார். அவர் பெரியவர் என்று யாரை சொன்னார் -சாயியையா இல்லை நாகுவையா என்பது இதுவரை எனக்குப் புரியாத புதிர்.
நமது Alumni meet டிற்கு அவரை அலைபேசியில்தான் அழைத்தேன், சிறிதும் தயங்காது, கட்டாயம் வருகிறேன் என்றார். "சார் நான் தில்லியில் இருக்கும் காரணத்தினால் நேரில் வர இயலவில்லை, இவ்வாறு phone இல் அழைப்பதற்கு மன்னிக்கவும். தவறாக நினைக்க வேண்டாம்" என்றேன். இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லி விழாவிற்கு நமக்கு முன்னதாகவே வந்திருந்து தன் ஆர்வத்தைக் காட்டினார். அவர் மேடையில் பேசிய நல் விஷயங்கள் உங்களுக்கெல்லாம் தெரிந்ததே.
மீதிக் கத அப்பறம்
3 comments:
மோகன் சாருக்கு பயந்த சுபாவம் என்பதை விட கூச்ச சுபாவம் இருந்தது என்பது என்னுடைய கருத்து. அவர் வகுப்பில் சில மாணவர்கள் பாடத்தில் சந்தேகம் கேட்பது போல் அவரது இந்த சுபாவத்தைக் கிண்டல் செய்ததுண்டு. அவரும் அதைப்புரிந்து கொண்டு உடனே ‘வேண்டாம் தம்பி, please உட்காருங்க’ என்று கூச்சத்துடனும் சற்று எரிச்சலுடனும் கூறியதுண்டு. சில மாணவர்கள் அவரை கலாய்ப்பது போல் கேள்வி கேட்க அவர் நெளிவதைப் பார்க்க பாவமாக இருக்கும்.
அவர் வகுப்பில் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்ப மாட்டார் அப்படி தன்னை தயார் படுத்திக் கொண்டு வருவார். பாடத்தில் வரும் சந்தேகங்களை வகுப்பு முடிந்த பிறகுதான் தீர்ந்து வைப்பார். இந்த விஷயத்தில் சாந்தா மேடத்திற்கும் அவருக்கும் சில சமயங்களில் வாக்குவாதம் கூட நடந்திருக்கிறது. ‘ஏன் சார் என் time ல extra class எடுக்கிறீங்க’ என்பார் சாந்தா மேடம்.
மோகன் சார் படிப்பைப்பற்றியோ, அவரின் பண்பைப்பற்றியோ எந்த குறையும் சொல்லமுடியாது. ஆனால் கம்பீரமான அணுகுமுறை தான் மாணவர்களை கவரும் அதுதான் மனதிலும் நிற்கும்
//பயந்த சுபாவம் உடையவர் எனக் கருதப் பட்டவர்// கவனிக்கவும் "கருதப் பட்டவர்". அன்வர் கூறியுள்ளதை ரிபீட்டுகிறேன். விஜியினுடைய ஞாபக சக்தியும் பாராட்டத் தக்கதாகவே உள்ளது.
Post a Comment