ஆங்கிலப் பேராசிரியர்களைத் தொடர்ந்து வருகிறார் நமது அன்புச் சகோதரராய் நடந்து கொண்ட திரு T.S. பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் கோபப் பட்டு ஒருநாளும் கண்டதில்லை.
Friday, 31 August 2012
Wednesday, 29 August 2012
பேராசிரியர்களும் நானும் - 2
திரு சேதுராம் அவர்களைப் பற்றிய முந்தைய பதிவிற்குப் பின் தற்பொழுது ஆங்கிலத்துறை சார்ந்த பேராசிரியர்கள் குறித்து. நமக்கு, திருவாளர்கள் பிரேம்பாபு, மோகன்ராம், ராமானுஜம், ராஜசேகரன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர்.
Tuesday, 28 August 2012
பேராசிரியர்களும் நானும்
கல்லூரிக்காலங்களில் சற்று துறவு மனப்பான்மை, தாழ்வு மனப்பாமை வாழ்வே நடத்தி வந்தேன். யாரோடும் அதிகம் பழகமாட்டேன். எதையும் serious ஆகவே பார்ப்பேன். இதில் சில விஷயங்கள் இப்பொழுதும் தொடர்ந்தாலும் என்னுள் இயல்பாக இருந்த நகைச்சுவை உணர்வை வெளியில் காட்ட ஆரம்பித்த பின்பே என் வாழ்வில் பல மாற்றங்கள் வந்தன.
அறிவிப்பு-1
Alumni - 2012 is named for this blog for the event of our Alumni meet. This blog will continue as our link and magazine. I think that
Monday, 27 August 2012
4. பேராசிரியர்களுடன் நாங்கள்!!
பேராசிரியை சாந்தா மேடம் எப்படி எங்களுக்கு ஆரம்பகாலங்களில் பீதியைக் கொடுத்தார்களோ? அதற்கு மாற்றமாக பேராசிரியர்களான பாலகிருஷ்ணன் சார் மற்றும் மோகன் சார் அவர்கள் மிகவும் நட்புடன் பழகியிருந்தார்கள். பாலகிருஷ்ணன் சார் மிக மிக அதிர்ஷ்டசாலி...! அவர் நடத்திய பாடங்களெல்லாமே easy ஆகவும்interesting ஆகவும் இருந்ததால் அவர் எடுக்கும் வகுப்புகளெல்லாம் ரொம்ப ஜாலியாய் கலகலப்பாயிருக்கும். நாங்கள் எப்பவும் கலகலப்பாயும் இலேசான மனதுடன் இருக்கவேண்டுமென்று அடிக்கடி சொல்வார்.
பயங்கர அறிவிப்பு
அன்வர் நிகழ்வுகளின் தொகுப்பை எழுதினால், நான் ஏன் பேராசிரியர்கள் உடன் ஏற்பட்ட என் அனுபவங்களை,
Monday, 20 August 2012
EID MUBARAK
உலகெங்கிலும் வன்முறைகள் ஓய்ந்து அன்பும், மகிழ்ச்சியும், சமாதானமும்
தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்.
Thursday, 16 August 2012
3. கல்லூரி களை கட்டுதல்
கல்லூரி வாழ்க்கையின் இனிமைகளை பலமுறை நண்பர்களுடன் பேசியிருக்கிறேன்.பகிர்ந்திருக்கிறேன். ஆனால் முதல்முறையாக இப்போதுதான் எழுத்தில் பதிவு செய்கிறேன். அதனால் ஒரு வரலாற்றுப்பதிவு போல் கோர்வையாக சம்பவங்கள் நடந்த காலவரிசைப்படி எழுதவது என்பது கொஞ்சம் கடினமாகயுள்ளது. மேலும் பிடித்த விஷயங்கள் தானே உடனே ஞாபகத்திற்கு வரும். ஆகவே சம்பவங்களை மட்டுமே முதன்மைப்படுத்தி பதிவு செய்யவிரும்புகிறேன். என்னைப் பொறுத்தமட்டில் கல்லூரியில் வாசம் செய்த அந்த மூன்று வருடங்களும் மிகச்சிறந்த வருடங்கள்தான். சம்பவங்கள் அனைத்தும் இந்த மூன்று வருடங்களுக்குள் நடந்தவைகள் அவ்வளவே...! அவைகளை முடிந்தளவில் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்.
Tuesday, 14 August 2012
Thursday, 9 August 2012
கிருஷ்ண ஜயந்தி
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே!
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே!!
அனைவருக்கும் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்
Monday, 6 August 2012
2. ஒரு புதிய திருப்பம்!!
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பசுமை நிறைந்த நினைவுகளே ! என்ற பாடலில் ஓர் அருமையான வரி வரும் “வரவறியாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே“ ஆனால் எங்கள் விஷயத்தில் வரவுமில்லாமல் செலவுமில்லாமல் மகிழ்ந்திருந்தோம். ஆம்! அந்த மூன்று வருடங்களும் நட்பு நதியில் நீந்தி பிரிய சாலையில் நடந்து பாச பயணமாகவே கழிந்தது.
1. என் கனவுக் கல்லூரி!!
இதுவரை கடந்து வந்த வாழ்வின் வழிகளில் நான் மிகமிக சந்தோஷமாகவும் சவுகரியமாகவும் வாழ்ந்த காலங்கள் நிச்சயமாக மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் படித்த காலங்கள் தான்.
Sunday, 5 August 2012
Subscribe to:
Posts (Atom)