எல்லோருக்கும் ஒரு பதிவு என்றால் இவருக்கு மட்டும் இரண்டாவதும் பதிவிடும் அளவிற்கு எத்தனையோ சம்பவங்கள். நாளும் ஒரு சம்பவம் நிகழும் என்றாலும் குறிப்பாய் சில சம்பவங்கள், என்னை முன்னிறுத்துவதையே இங்கு குறிப்பிடுகின்றேன்.
Wednesday, 31 October 2012
Saturday, 27 October 2012
Friday, 26 October 2012
பேராசிரியர்களும் நானும் - 6
நாம் ஒருவரை சந்திக்கையில் சிலரை உடனேப் பிடித்து விடும், சிலரைக் கண்டால் வெறுப்பாய் இருக்கும். காரணம் தெரியாது. அது முன்ஜென்மத் தொடர்பு காரணம் என்பார்கள் சிலர். அதுபோல், திரு சொ சொ மீ அவர்களுடனான தொடர்பு முன் ஜென்மத் தொடர்பு என்றும் சொல்லலாம்.
Thursday, 18 October 2012
திரு சொ.சொ.மீ. உரை - “பக்தி இலக்கியம்”
திரு சொ.சொ.மீ. அவர்கள் தில்லியில் 15.09.2012 அன்று நடந்த அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் “பக்தி இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றிய போது பதிவு செய்யப்பட்டது.
பின்வரும் பாடல்களைத் தன் உரையில் குறிப்பிடுகிறார் :
பரிபாடல்
யா ஆம் இரப்பதை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்அருளும் அன்பும் அறனும் மூன்றும்
திருமந்திரம்
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
திருஞான சம்பந்தர்
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாம்மே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே
திருவாசகம்
ஏசினும், யான் உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைத்து வேசறு விடுதி கண்டாய்
அடைக்கலப்பத்து
மாவடு வகிர் அன்ன கண்ணி பங்கா!நின் மலர் அடிக்கே
கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்;
பா இடை ஆடு குழல் போல், கரந்து பரந்தது, உள்ளம்,
ஆ, கெடுவேன்;உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
(திரு சொ சொ மீ சுந்தரம் அவர்களின் உரைக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்)
(திரு சொ சொ மீ சுந்தரம் அவர்களின் உரைக்கு, தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்)
Sunday, 7 October 2012
வார்த்தைகளே ஓவியமாய்......

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் சுவாமியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை மையமாக இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது. இந்தப் பெருமையைச் சேர்த்தவர், ஜித்திஷ் கல்லட் (Jitish Kallat) என்ற பாரம்பரிய இந்திய ஓவியர். இவர் இந்த இடத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரையை இன்ஸ்டிடியூட்டின் Grand Stairs எனப்படும் மாடிப்படிகளில் வானவில் வண்ணங்களில் வரிசையாகப் பதித்து “Public Notice 3” என்ற பெயரில் ஓவியமாக்கி இருக்கிறார். முதல் படியிலிருந்து படித்துக்கொண்டே ஏறினால் இரண்டாம் தளத்தை அடையும்போது முழு உரையையும் படிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனித்தன்மை.
இவரின் கைவண்ணம் செப்டம்பர் 11, 2010 அன்று, சுவாமியின் சொற்பொழிவிற்கு சரியாக 108 வருடங்களுக்குப்பிறகு காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதன் எழுத்துக்கள் ஒளியால் விளங்குகின்ற சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் அச்சுறுத்தும் நிலைகளைக்குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன
.
.
விவேகானந்தரின் உரையை நினைவுப்பட்டயம் இட்டு புதுமையான கண்காட்சியாக்கி கௌரவித்திருப்பது பாராட்டத்தக்கது.
Tuesday, 2 October 2012
8. ரத்த தானம்!!
கல்லூரியில் படிக்கும் காலங்களில் பணம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவற்றின் முக்கியத்துவமும் அவ்வளவாக தெரியவில்லை. காலை எழுந்தவுடன் துடிப்பு...! பின்பு கலகலப்பாயிருக்கும் எங்கள் கல்லூரி.... மாலை முழுவதும் அதன் நினைப்பு...! என்று வழக்கப்படுத்திக்கொண்டதால் எதிர்காலம் கடந்தகாலம் என்பதெல்லாம் தேவையற்ற சமாச்சாரங்களாக அப்போது தோன்றியது. காலையுணவு வீட்டில் முடிந்துவிடும். பஸ் பாஸ் இருப்பதால் போய் வருவதற்கான பயண செலவு கிடையாது. மத்தியானத்திற்கான சாப்பாட்டை டிபன் பாக்ஸில் கொண்டுவந்துவிடுவதால் கேண்டின் செலவு கிடையாது. ஆகவே மொத்தத்தில் ‘பாக்கெட் மணி’ அப்படிங்கிற விஷயமே இல்லாத ஒன்றாக இருந்தது.
Subscribe to:
Posts (Atom)