நிலவில் முதன்முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களை அமெரிக்கா மக்கள் எப்படி பேட்டி மேல் பேட்டி எடுத்திருப்பார்களோ ..? அந்தளவிற்கு முதன்முதல் மாணவிகள் இல்லத்திற்கு விஜயம் செய்த குழந்தைவேலுவிடம் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு விபரங்களைக் குடைந்தெடுத்தோம். அந்தசமயத்தில் அவன் எங்களுக்கு ஒரு கொலம்பஸாகவே.... தெரிந்தான்..!
Wednesday, 19 September 2012
விநாயகர் பெருமை




விநாயகரின் தலை யானை, உடல் மனிதன் (உடல் பூத வகை என்று சொன்னால் பஞ்ச பூதங்களால் ஆன எனப் பொருள் கொள்ள வேண்டும்)
அவர் வாஹனம் மூஞ்சூறு எனப்படும் எலி வகை. பாலூட்டி வகையில் நிலத்தில் வாசிப்பதில் பெரியது யானை, சற்று நடுத்தரமான உருவம் மனிதன் மற்றும் சிறிய உருவம் எலி. எனவே விநாயகரின் வடிவு தாய்மையின் வடிவம் என்பதாலே, தாய்க்கு முதலிடம் கொடுக்கும் ஹிந்துக்கள், கணேசருக்கும் முதலிடம் கொடுத்துள்ளார்கள்.

Tuesday, 18 September 2012
பேராசிரியர்களும் நானும் - 5
நாங்கள் கல்லூரியில் படிக்க சேர்ந்த பொழுது எங்களுடன் கல்லூரியில் படிப்பிக்க சேர்ந்தவர்கள், திருவாளர்கள் மோகன் சாரும், பாலகிருஷ்ணன் சாரும். இருபாலர் வகுப்பை அமைந்ததைப் போலவே பணியிலும் இருபாலர் வேண்டும் என நிர்வாகம் நினைத்ததோ என்னவோ, சாந்தா மேடம் அவர்களை பணி நியமனம் செய்தது.
Tuesday, 11 September 2012
Monday, 10 September 2012
அன்று அறியாதவன் - இன்று.....
எழுதத் துவங்கிய புதிதில் ஏதாவது புனைப்பெயரில் எழுதலாம் என்று நினைத்து அறியாதவன் என்ற பெயரில் எழுதத் துவங்கினேன். பிறகு ஏன் சொந்தப் பெயரிலேயே எழுதக்கூடாது எனத் தோன்றவே, இந்த பெயர் மாற்றம்.
தொடர்ந்து ஆதரவை விரும்பும்....
அன்வர் உசேன்.
பெயர் மாற்றம்
"அறியாதவன்" என்ற புனைப் பெயரில் இதுவரை எழுதி வந்த அன்வர், அதிகம் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதன் பாதிப்பில் இவருக்கு பதிலாக இவர் பாணியில், "அறியாதவன்" என்ற பெயருக்கு பதிலாக சொந்தப் பெயரிலேயே இனி எழுதுவார், எழுதுவான்.
பெயர் மாற்றம் செய்ய 9 ஓட்டுக்கள் வந்துள்ளன. செய்ய வேண்டாம் என ஒரு ஓட்டும் விழவில்லை. இன்றுடன் வாக்குப் பதிவு முடிந்தது. எனவே "NOSTALGIA RECALLED" என்றப் பெயரை இந்த வலைப்பூவிற்கு சூட்டலாம் என இருக்கிறோம். அவரவர் வீட்டில் இந்நிகழ்வை சிறப்பாக கொண்டாடவும்.
6. நட்பின் அறிமுகம்!!
கல்லூரி காலங்களில் மட்டுமல்லாமல் எப்பொழுதும் என் நண்பர்களை டேய்....., போடா......, வாடா.......... என்று ஒருமையில் அழைப்பதுதான் ரொம்பப்பிடிக்கும். அப்படி அழைக்கும்போது அந்நியோன்னியமாக நெருக்கமாக உரிமையாக உணர முடிகிறது. ஆகவே அப்பவும் சரி, இப்பவும் சரி, நட்பின் விளிப்பை ஒருமையில் அழைத்தே........... களித்திருக்கிறேன். தோழிகளை வா... போ... என்ற ரீதியில் அழைத்து பழகியிருக்கிறேன். இப்போது சில நண்பர்கள் அவர்... இவர்..... என்று மரியாதையாக என்னை குறிப்பிடும் போதும் விளிக்கும் போதும் ஒவ்வாமையாக உணர்ந்திருக்கிறேன். பிரியபூமியில் மரியாதை தோலி உரிக்கப்பட்ட நட்பின் விதைகள் தான் வேரூன்றி தோழமை விருட்சமாக வளரும்.
Wednesday, 5 September 2012
பேராசிரியர்களும் நானும் - 4
இன்று ஆசிரியர் தினம், இந்நாளில் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன். நம் அனைவருக்கும் அன்னையே முதல் ஆசிரியர், அவருக்கும், தந்தைக்கும், கல்விச்சாலைகளில் பாடம் கற்றுத்தந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், வாழ்வில் நமக்குப் பல உண்மைகளை கற்றுக் கொடுக்கும் உடன் வாழும் மக்களும் ஆசிரிய பெருமக்களே ஒருவகையில். அவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.
Happy Teacher's Day!
ஆசிரியர் தின வாழ்த்து,
அவசியம் சொல்ல வேண்டிய ஒன்று,
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்,
கல்லாமை என்ற,அறியாமை இருளை நீக்கி,
கல்வி கண் தரும் இறைவன் நம் ஆசிரிய பெருமக்கள்.
அவர்களின் அரிய பணிக்கு தலை வணங்குவோம்!
Remembering with respect & affection!!
HAPPY TEACHER’S DAY!!!
Monday, 3 September 2012
அறிவிப்பு - 2
There are so many response to change the name of the blog. Smt Viji has proposed a name of Yesteryears@BCS - Nostalgia Recalled. If you have any new name in the mind please share. The best name will be selected and renaming this blog will held.
இவ்வலைப்பூவின் பெயரை மாற்ற வேண்டும் என அதிகம் பேர் விரும்புகின்றனர். இதற்கு விஜி அவர்கள் Yesteryears@BCS - Nostallgia Recalled என்றப் பெயரை முன் மொழிந்துள்ளார். உங்கள் மனத்திலும் ஏதேனும் புதுப் பெயர் தோன்றினால் அவசியம் அனுப்பவும். நல்லப் பெயரை பரிசீலித்து, புது பெயரை விரைவில் சூட்டுவோம்.
Sunday, 2 September 2012
5. முடிசூடா மன்னன் நாகு!!
எங்கள் கல்லூரிக்காலங்களில் பெரும்பாலும் நாங்கள் ஆசிரிய பெருந்தகைகளை அவ்வளவாக பகைத்துக்கொள்ளவில்லை. அதிகமாக கலாட்டா, கலவரம் இல்லாமல் அமைதி பூங்காவாகவே கடைசி வரையிருந்தது. எங்கள் வகுப்பில் மாணவிகள் மெஜாரிட்டியாகயிருந்த காரணத்தால் பேராசிரியர்களெல்லாம் நிம்மதியாகவே வகுப்பெடுத்து சென்றனர். என்னதான் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தாலும் வகுப்பு முடிந்து ஆசிரியர் சென்றபின்னர் தான் விழுந்து விழுந்து சிரிப்போம். ஆகவே பெரும்பாலான பேராசிரியர்களின் வகுப்பு நேரங்களெல்லாம் சர்வ நிசப்தமாகவேயிருக்கும்.
Subscribe to:
Posts (Atom)