கிருஷ்ணமூர்த்தி தன் அனுபவங்களை எழுதுகிறார் :
2008 ஆம் ஆண்டு துவக்கத்தில் கல்லுரி மாணவர்கள் சந்திப்பு கல்லுரி படிப்புத் தொடங்கிய
25 ஆண்டுக்குப் பின்னர் நினைவுறுத்தும் விதமாக இச்சந்திப்பினை 2009 ஆம் ஆண்டு நடத்த வேண்டும் என்று விரும்பினேன். அதனை எனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். நண்பன் திரு.ஸ்ரீனிவாசன் இப்பணியினை இப்பொழுதே தொடங்கு ஆனால் நாம் 2012 இல் கல்லுரி முடித்த ஆண்டாக இச்சந்திப்பை நிகழ்த்தலாம் என்று ஆலோசனை கூறினார். நான் நினைவில் வைத்து இருந்த நண்பர்களின் பட்டியலைத் தயாரித்தேன். இதனை உறுதி செய்ய என்னிடம் இருந்த group photo வினை தேடி எடுத்து பெயருடன் compare செய்தேன். என் முதல் பணி வெற்றிகரமாக அமைந்தது. என் கையில் இருந்த பட்டியலில், குரூப் போட்டோவில் இருந்த அனைவர் பெயரும் இடம் பெற்று இருந்தது. (ஒருவர் பெயர் மட்டும் விடுபட்டுப் போயிருந்தது 2012 ஆம் ஆண்டு தெரிய வந்தது. அவர் அந்த group photo வில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ).
25 ஆண்டுக்குப் பின்னர் நினைவுறுத்தும் விதமாக இச்சந்திப்பினை 2009 ஆம் ஆண்டு நடத்த வேண்டும் என்று விரும்பினேன். அதனை எனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். நண்பன் திரு.ஸ்ரீனிவாசன் இப்பணியினை இப்பொழுதே தொடங்கு ஆனால் நாம் 2012 இல் கல்லுரி முடித்த ஆண்டாக இச்சந்திப்பை நிகழ்த்தலாம் என்று ஆலோசனை கூறினார். நான் நினைவில் வைத்து இருந்த நண்பர்களின் பட்டியலைத் தயாரித்தேன். இதனை உறுதி செய்ய என்னிடம் இருந்த group photo வினை தேடி எடுத்து பெயருடன் compare செய்தேன். என் முதல் பணி வெற்றிகரமாக அமைந்தது. என் கையில் இருந்த பட்டியலில், குரூப் போட்டோவில் இருந்த அனைவர் பெயரும் இடம் பெற்று இருந்தது. (ஒருவர் பெயர் மட்டும் விடுபட்டுப் போயிருந்தது 2012 ஆம் ஆண்டு தெரிய வந்தது. அவர் அந்த group photo வில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ).
முதலில் 1)என் தொடர்பில் இருந்த திருவாளர்கள் 2)ஸ்ரீனிவாசன், 3) அன்வர், 4)நாகராஜன், 5) ராமகிருஷ்ணன் ஆகியோரின் முகவரிப் பட்டியல் தயாரித்தேன். பின்னர் தொடர்பில் வந்த 6)திரு. கிரிதரன் முகவரி இணைந்தது. 7)திருவாளர்கள். குழந்தைவேல் மற்றும் 8)ராஜகோபால் cell phone எண் திரு நாகராஜன் மூலம் கிடைத்தது. இதன் பின்னர் பணியில் தொய்வு ஏற்பட்டது. புதிதாக வேறு யாரும் தொடர்பில் வரவில்லை.
9) திரு மகாதேவன் அவர்கள் மும்பையில் இருந்து நெல்லைக்கு மாற்றலாகி வந்தார் என்ற தகவலும் அவரின் முகவரியும் நாகராஜன் மூலம் கிடைத்தது. என் உறவினர் திருமணத்திற்கு வந்த 10)திரு ரமேஷுக்கும் எனக்குமான பொது நண்பர் (அவரும் ரமேஷ்) அவரிடம் ரமேஷின் அலைபேசி எண் கிடைக்கப்பெற்றேன். இதற்கு முன்னதாகவே 11) திருமதி ஜெயலலிதா அவர்களை சென்னையில் என் அலுவலகம் அருகே பணி புரிந்து வந்தமையால், சில நேரங்களில் அவரை சந்தித்ததுண்டு. அவர்களையும் பட்டியலில் சேர்த்து இருந்தேன். பிறகு சில நாட்களுக்குப் புதிய தொடர்பு எதுவும் வரவில்லை.
ஒரு முறை மதுரை வந்தபொழுது திருமதி மேகலா அவர்கள் பணியாற்றும் இடம் குறித்து ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். அனால் அங்குதான் இருக்கிறாரா என்று தெரியவில்லை என்றும் கூறினார். என் வீட்டிற்கு அருகில் அவ்விடம் இருந்ததால் சென்று பார்க்க முடிவு செய்தேன். பணியில் ஒரு முக்கியத் திருப்புமுனை அமைந்தது. மேகலா அவர்களை சந்தித்து இச்சந்திப்பினைக் கூறியவுடன் மிகுந்த உற்சாகம் காட்டினார்கள். அத்துடன் நிற்கவில்லை அவர்கள் ஒரு மகத்தான பணியினை செய்தார்கள். தன தொடர்பில் இருந்த சில நண்பர்களின் அலைபேசி எண்ணை தருவதாக கூறி உடனே குடுத்து உதவினார்கள். ஆம் 12)மேகலா அவர்கள் மூலம் 13)குமார், 14)ராணி 15) ராஜ ஸ்ரீ ஆகியோர் தொடர்புக்கு வந்தார்கள். இதில் திருமதி ராஜ ஸ்ரீ அவர்கள் இச்சந்திப்பில் ஆர்வம் இல்லை என்று கூறிவிட்டார்கள். குமார் மூலம்16) உபேந்திரன், 17)விஜயகுமார் 18) உஷாமாயி ஆகியோரும் தொடர்புக்கு வந்தனர்.
2008 ஆம் ஆண்டு சௌராஷ்டிரா கல்லூரியில் நடந்த பழைய மாணவர்கள் சங்கக் கூட்டத்திற்கு வந்திருந்த பொழுது திரு சேஷய்யன் அவர்கள் மூலம் 19) திருமதி பானுமதி அவர்கள் தொடர்புக்கு வந்தார்கள் எனினும் எண் மாறுதல் காரணமாக தொடர்ந்து தொடர்பில் இல்லாமல் போனார்கள். பின்னர் அவரும் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிய வந்தது.
நண்பர்களுடன் 2010 நவம்பர் மாத இறுதியில் அகோபிலம் சென்று இருந்தேன் அப்பொழுது மதுரையில் இருந்து ஸ்ரீனிவாசன் அவர்களின் அழைப்பு வந்தது. திருமதி. பாலா அம்புஜம் அவர்களின் எண் கிடைத்ததாக அவர் கொடுத்த எண்ணில் 20) பாலா அம்புஜம் அவர்களை தொடர்பு கொண்டேன். இதற்கு முன்னதாகவே சென்னையில் பார்த்து இருந்தாலும் அவர்களின் தொலைபேசி எண் ஏனோ எனக்கு அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை.
21)திருமதி சாந்தி அவர்களின் உறவினர் எங்கள் பொது நண்பர். அவரைக் கண்டுபிடித்தால் சாந்தி அவர்களின் விலாசம் கிடைக்கும் என்று ஸ்ரீனிவாசன் அவர்களிடம் கூறி இருந்தேன். எங்களின் மற்றொரு பொது நண்பர் வீட்டிற்கு சாந்தியின் உறவினர் வந்திருந்த விஷயத்தை பெங்களுருவில் இருந்து, டெல்லியில் இருந்த எனக்கு ஸ்ரீனிவாசன் கூற அவரைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு சாந்தி அவர்களின் விலாசம் பெற்றுக் கொண்டேன். இப்பொழுது சற்று முன்னேற்றம் காணப்பட்டதால் சென்னையை சேர்ந்த நாங்கள் அனைவரும் சந்திப்பது என முடிவு செய்து, அதனை நிறைவேற்றும் பொறுப்பு அன்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் வசிக்கும் அன்வர், சாந்தி, பாலா அம்புஜம், ஜெயலலிதா, கிரிதரன் மற்றும் மதுரையில் இருந்து ஸ்ரீனிவாசன் அவர்களும் நான் டெல்லியில் இருந்து சென்னை வரும்போது சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா அவர்களும் கிரிதரன் அவர்களும் சந்தர்ப்ப சூழ்நிலையால் எங்களின் வேடந்தாங்கல் சுற்றுலாவிற்கு வர இயலவில்லை.
சௌராஷ்டிரா கல்லூரியில் பணி புரியும் பேரா. ஞானேஸ்வரன் அவர்களை என் நண்பர் முலம் கிடைத்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புதுச்சேரியில் பணி புரியும் பேரா. ரமேஷ் (திருமதி ராஜேஸ்வரி அவர்களின் கணவர்) அவர்களின் தொலைபேசி என்னைப் பெற்று 22)ராஜேஸ்வரி அவர்களின் முகவரியைப் பெற்றேன். ராஜேஸ்வரி மூலம் 23) திருமதி M.L. விஜயலட்சுமி அவர்களின் முகவரி கிடைத்தது. திருமதி ராணி மூலம் தொடர்பிற்கு வந்தனர் 24)திருமதி செந்தாமரை அவர்களும் 25)திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களும். திருமதி செந்தாமரை மூலம் 26) திருமதி G.D.விஜயலட்சுமி அவர்களின் முகவரியும் கிடைத்தது. திருமதி ஜெயலக்ஷ்மி வழியாக 27) திரு மேகநாதன் அவர்கள் முகவரி கிடைத்தது. குமாருக்கு நான் குடுத்த குடைச்சல் காரணமாக 28)திரு பிரகாஷ் தொடர்புக்கு வந்தார்.
என்னுடன் தில்லி அமைச்சகத்தில் பணியாற்றும் நண்பர் திரு கணேசன் என்பவர், (அன்வருக்குக் கூட அவரை அறிமுகம் உண்டு) அவர் நான் இப்பணியில் ஈடுபட்டு இருப்பதனை அறிந்தார். அவரிடம் என்னிடம் இருக்கும் தொடர்புகள், முயற்சிகள்
ஆகியவைக் குறித்துப் பேசும் பொழுது திருமதி 29) B. விஜயலட்சுமி அவர்கள் தில்லி சுங்கத்துறையில் இருப்பதுக் குறித்துக் கூறினேன். அவர்கள் தில்லியில் அருகில் இருந்தும் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று பேசிக் கொண்டு இருந்தோம். உடனே அவர் தன நண்பர் ஒருவர் சென்னை சுங்கத்துறையில் பணி புரிவதாகவும் அவர் மூலம் முயற்சி செய்வதாகவும் கூறிச் சென்றார். பிறகு இது குறித்து எந்த தகவலும் இல்லை அவர் நண்பர் மிகவும் busy ஆக இருப்பதாகவும் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார். திடீரென ஒரு வாரம் கழித்து ஒரு அலை பேசி எண்ணைக் கொடுத்து நீ கேட்ட திருமதி விஜயலட்சுமி அவர்களின் அலை பேசி எண் என்றார். எனக்கு உண்மையில் ஆச்சரியம். அவருக்கும் இந்தப் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை ஆனாலும் நினைவில் வைத்து இதை செய்துள்ளாரே என்று. அவர் சொன்னார் நண்பர்கள் சந்திப்பு என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். அந்தப் பணிக்கு என்னால் ஆன சிறு உதவி என்று சொன்னார்.
அவரைத் தொடர்பு கொண்ட மறுநாள் நண்பர் சீனிவாசனிடம் இருந்து ஒரு அழைப்பு. 30) ஞாநேஸ்வரியின் தம்பியினை சந்திக்க நேர்ந்ததாகவும் அவரிடம் இருந்து ஞாநேஸ்வரியின் அலைபேசி எண்ணைப் பெற்றுள்ளேன் என்று கூறி அதைக் கொடுத்தார்.
திருமதி விஜயலட்சுமி M.L அவர்கள் மூலம் 31) கலாவதி அவர்கள் தொடர்புக்கு வந்தார்கள். திருமதி மேகலா அவர்கள் என்னிடம் விடுபட்டுப் போன நண்பர்களின் பெயர்ப் பட்டியல் தரவும் என்று கேட்டுக் கொண்டார். அவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு இருவரம் முன்னதாக 32) நாக நந்தினி அவர்களின் அலைபேசி என்னை அவரின் தோழியின் சகோதரி மூலம் பெற்றுக் கொடுத்தார்.
ஸ்ரீனிவாசன் அவர்கள் email களை forward செய்யும் பழக்கம் கொண்டவர். அவர் அனுப்பிய ஒரு email இல் இருந்த ஒரு முகவரி 33) திரு வெங்கடேஸ்வரன் அவர்களுடையதாக இருக்கும் என்று யூகித்து அவர் அனுமதி இல்லாமலேயே திரு வெங்கடேஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டேன். அவர் கத்தாரில் பணி புரிவதனால் வர இயலவில்லை என்று தெரிவித்து விட்டார்.
மந்திர தேதி 20/4/2012 பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்
2 comments:
Deserve a big pat!
TNQ for your visit and comment
Post a Comment